Tuesday, 27 September 2011

பிளாஸ்டிக் இல்லாத குமரி மாவட்டம்!

தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பல இடங்களில் எழுத்தளவில் மட்டுமே உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் மக்கள் வெகுசிரத்தையுடன் இந்த தடையை ஆத்மார்த்தமாக பின்பற்றி வருகிறார்கள்.

கன்னியாகுமரிக்கு சென்று பார்த்தால் ப்ளாஸ்டிக் மீதான தடை  அங்கே உண்மையில் கடைப்பிடிக்கப்படுவது தெரியவரும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில்  கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளின் ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும் ப்ளாஸ்டிக் பைகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அபூர்வமாகத்தான் காண முடியும்.

ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இதன் மீதான தடை அமலுக்கு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இதனை அடுத்து மாவட்ட மக்களிடையே தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக்குகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சிறப்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ப்ளாஸ்டிக்குக்கு எதிரான இயக்கத்திற்கு எவ்வித எதிர்ப்பும் கிளம்பாதபடி பார்த்துக் கொள்வதற்காக, அடித்தள நிலைகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்ற குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள் என இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

ப்ளாஸ்டிக் பொருட்களினால் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் எவ்வளவு கேடு விளைவிக்கக்கூடியவை என்பதை வலியுறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினம், உலக கடல் தினம், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், அரசுத் திட்டங்கள் என எல்லா நிகழ்வுகளிலும் பொது மக்கள் ப்ளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.

இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவரே நேரில் பங்கேற்பார் அல்லது சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் போன்றவர்கள் பங்கேற்பார்கள்.

உயிரியல் முறையில் அழிந்துவிடக்கூடிய பைகளையும், பெட்டிகளையும் பயன்படுத்துமாறும், ப்ளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுமாறும் இந்த அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டனர்.தொடக்கத்தில் கன்னியாகுமரியிலும் மக்கள் ப்ளாஸ்டிக் அல்லாத பைகள், கப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினார்கள். இது இயற்கையே! எனினும், தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக கழிவு நீர்பாதைகள் அடைபடுவதும், அதனை தொடர்ந்து கொசுக்கள் பெருகுவதும், அதனால் ஦டிங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதும் மக்களால் உணரப்பட்டது.

ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான சட்டப்பூர்வ தடை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவில், மக்கள் தங்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த தடையை அமல்படுத்துவதற்கு என, கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பொது மக்கள் உள்ளூர் அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தடையை மீறுவோர் பற்றிய தகவல்களை தெரிவித்தனர்.

இந்த தகவல்கள் அடிப்படையில் அதிகாரிகள் கொண்ட செயல்பாட்டுக் குழுவினர், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். செயல்பாட்டுக் குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுச் சுகாதாரம், வருவாய் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், உள்ளூர் காவல் துறை உதவியுடன் ப்ளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த தடையை அமல்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட எவரும்  தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கவே இல்லை.

இதுபற்றி ஒரு விவசாயி கருத்து தெரிவிக்கையில், ப்ளாஸ்டிக் பொருட்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதால், பல ஆண்டுகளாக உரம் தயாரிக்க பயன்பட்டு வந்த வீட்டு குப்பையின் தரம் கெட்டுப்போனதாக ஆவேசமாக கூறினார்.

கன்னியாகுமரியில் விவசாயிகள் பலர் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவை மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ப்ளாஸ்டிக் தடை உத்தரவுக்கு பிறகு ஒருவர் சந்தைக்குச் சென்றால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள்.

சில சமயங்களில், காய்கறி பழம், மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்னதாக துணி பைகளையும் வாங்கிக் கொண்டனர்.இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களை கொண்டு வந்து வாங்கிச் செல்லவேண்டும். இல்லாவிடில் இறைச்சி காகிதங்களில் பொட்டலங்களாக மடித்து தரப்படும்.

தேநீர் கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் தேநீர் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பினால், காகிதக் குவளைகளில் தேநீர் வழங்கப்படும். வியாபாரிகள் முடிந்த அளவுக்கு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது ஆச்சர்யகரமாமன வரவேற்கத் தகுந்த மாறுதல் தானே.!

இந்த வெற்றிக்கு காரணமென்ன என்று கேட்டபோது, உணர்வுப் பூர்வமாக ப்ளாஸ்டிக்குக்கு எதிரான இயக்கத்தை ஏற்றுக் கொண்ட மக்களே முதல் காரணம் என்றும், அர்ப்பணிக்கும் மனப்பான்மை கொண்ட அதிகாரிகள் அதற்கு அடுத்தபடியாக இதற்கான பெருமையை பெறுகிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கடந்த பத்து மாதங்களாக நிர்வாகம் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளையும் விளக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.

ப்ளாஸ்டிக் இல்லாத கன்னியாகுமரி, ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து ப்ளாஸ்டிக்குகளை ஒழித்ததுடன் மாவட்டத்தின் அழகை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்கிறது என்பதுதான் உண்மை.

இப்போது நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் கன்னியாகுமரி மக்களை பார்த்து பொறாமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த கட்டம், நாடெங்கிலும் உள்ள மக்கள் கன்னியாகுமரியின் அடிச்சுவட்டை பின்பற்றி தூக்கி எறிந்துவிடக்கூடிய ப்ளாஸடிக்குகளை ஒழிக்க முன்வரவேண்டும் என்பதுதான்.

'நான் ஸ்டிக்' செய்யும் கேடு!




Friday, 16 September 2011

களப்பணியில் மாணவர்கள்!




களப்பணியில் மாணவிகள்!








களப்பணியில் மாணவர்கள்!










GREETINGS,...2

GREETINGS,...

DEAR ALL,

MY HEARTY THANKS AND CONGRATULATIONS FOR ALL THE STUDENTS , ENVIRONMENTAL ACTIVISTS AND SOCIAL WORKERS WHO HAVE PARTICIPATED IN TODAY'S FIELD WORK ORGANISED BY THE FORUM FOR ENVIRONMENTAL PROTECTION IN ASSOCIATION WITH ST. JOSEPH'S COLLEGE ,SRIMAD ANDAVAN ARTS & SCIENCE COLLEGE, , AND LIONS CLUB OF SRIRANGAM RAJAGOPURAM. LET US ALL JOIN HANDS TO CREATE AWARENESS ON THE MINIMAL USAGE OF PLASTICS TO PROTECT OUR ENVIRONMENT. LET TRICHY BE GREEN AND CLEAN WITH OUR EFFORT.

WITH REGARDS,
Lion E. PAUL GUNA LOGANATH
DY.CO-ORDINATOR
FORUM FOR ENVIRONMENTAL PROTECTION
98941-35014
snehamguna@gmail.com

Thursday, 15 September 2011

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுரி மாணவர்கள் களம் இறங்கியுள்ள காட்சிகள். செப் 16






தொடங்கியது களப்பணி!






Greetings!

Dear Members of EPG,
Greetings!  I m happy that the EPG is really working hard for the 16th
programme.  I m sorry I not able to participate as I am out of
station.  I wish the programme best and thanks the committee members
for their wonderful initiatives and made it realised with Sringam
Thank you
N.Manimekalai
--
Prof. N.Manimekalai,
Prof and Head,
Dept of Women's Studies,
Bharathidasan University,
Khajamalai Campus,
Tiruchirappalli. - 620023.,
Tamil Nadu,
India.

Thursday, 1 September 2011

பாழாறு ஆன பரணியாறு!

பாழாறு ஆன பரணியாறு!
கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆறு இல்லாத ஊர் பாழ்!’ அப்படித்தான் தமிழ்நாட்டின் நிலைமை மாறிவருகிறது. தாமிரபரணி, பாலாறு என்று தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகள் எல்லாம் இயந்திரங்களால் கூறுபோட்டு, கிழிக்கப்பட்டு வருகின்றன. மழை பெய்து வெள்ளம் வந்தாலும் ஆற்றில் நீர் தங்காமல், அப்படியே அடித்து கடலுக்குச் சென்று வீணாகும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொழித்துவருவதால் மணல் வியாபாரமும் அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் அள்ளப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்கூட கடத்தப்படுகின்றன. அப்படி தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து அதிகப்படியான மணல் அள்ளப்படுவதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உடன்வாதியாக சேர்ந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை சந்தித்து, மணல் குவாரி தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரனை குறித்து விரிவாகப் பேசினோம்.

‘‘தமிழ்நாட்டில் பெரிய ஆறுகள், படுகை ஆறுகள் என்று மொத்தம் 33 ஆறுகள் ஓடுகின்றன. எல்லா ஆறுகளிலேயும் மணல் அள்ளுகிறார்கள். அதுவும் வரைமுறையில்லாமல், விதிமுறைகளை மீறி மணல் அள்ளுகிறார்கள். இதை எதிர்த்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருக்கும் மக்களும் மணல் அள்ளுவதால் பாதிக்கப்பட்டு, இதேபோன்ற மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்கள். மனுவை விசாரித்த நீதிபதிகள், மணல் அள்ள பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தக் கூடாது என்று தற்காலிக தீர்ப்பு அளித்தார்கள். இந்தத் தற்காலிக தடையை ரத்து செய்யவேண்டும் என்று அரசு தரப்பிலும், ஒப்பந்தக்காரர்கள் தரப்பிலும் மனு செய்யப்பட்டது.

ஆனால், தற்காலிக தீர்ப்புக்கு தடை விதித்துவிடக் கூடாது என்பதில் பொது மக்களும், வழக்கறிஞர்களும் உறுதியாக இருந்தார்கள். எனவே இந்த வழக்கில் என்னையும் உடன்வாதியாக இணைந்து வழக்கை நடத்தச் சொல்லி வலியுறுத்தினார்கள். அந்தக் கோரிக்கையை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், நானும் ஒரு மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஆஜராக என்னை அனுமதித்தனர். அதன்பிறகு விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவரும், மணல் குவாரி உரிமையாளர்களின் சார்பில் ஒரு வழக்கறிஞரும் வாதாடினார்கள்.

‘கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கும், அரசின் வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மணல் அவசியம். ஆகவே, மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால், மணல் தேவை பூர்த்தியாகாமல் போகிறது. அதனால், பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று வாதாடினார்கள்.

அதன்பிறகு எங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தோம்.

‘பொக்லைன் பயன்படுத்தினால், அளவுக்கு மீறி மணல் அள்ளப்படும். விதிமுறைப்படி 3 அடிகளுக்கு மேல் ஆற்றை ஆழப்படுத்தி, மணல் அள்ளக்கூடாது. மணல் அள்ளுகிற இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் இருந்தால், அங்கே மணல் அள்ளக்கூடாது. ஆற்றை மறித்து மணல் அள்ளக்கூடாது. அதேபோல், பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது. ஆனால், பொறியாளர்களின் சிறப்பு அனுமதி பெற்று மணல் அள்ளலாம். அதுவும், காலை 8 முதல் மாலை 6 மணி வரைதான் மணல் அள்ளவேண்டும். அதன்பிறகு ஆற்றில் இறங்கக்கூடாது. ஒரு லாரிக்கு ஒரு யூனிட் மணல் மட்டுமே அள்ள வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த எல்லா விதிகளையும் புறக்கணித்துவிட்டு ஒரு லாரிக்கு 4 யூனிட் மணல் அள்ளுகிறார்கள். ஒரு லாரிக்கு மட்டுமே பர்மிட் வாங்கிவிட்டு அதிகமான லாரிகள் வைத்து மணல் அள்ளுகிறார்கள்.

அப்படி அள்ளப்படும் மணல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. ஆக, இதை லாப நோக்கோடு மட்டுமே செய்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மணல் அள்ளவில்லை. அப்படியே மக்களுக்கு தேவையிருந்தால், ஆங்காங்கே குடோன்களில் இருப்பு வைத்திருக்கிற மணலை மக்கள் பயன்படுத்த அளிக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் விலை ஏற்றத்துக்காக மட்டும் மணலை பதுக்குகிறார்கள். எனவே, பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளுவதை அனுமதிக்கக் கூடாது. ஆட்களைப் பயன்படுத்தி மட்டுமே மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். அதுவும், பர்மிட் பெற்றிருக்கிற லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்’ என்று வாதாடினோம்.

இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டியை அமைத்தது. அந்தக் குழுவில் உயர்நீதிமன்ற பதிவாளர், ஒரு தொல்லியல் ஆய்வாளர், மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழல் & புவியியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட மூன்று பேர் உள்ளனர். இந்தக் குழு, தமிழ்நாட்டில் மணல் அள்ளப்படுகிற இடங்களில் எல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவை அந்தக் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

‘மணல் அள்ளுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகள் அனைத்தும் மீறப்பட்டு இருக்கின்றன. 3 அடிக்கு பதிலாக 10 அடிக்கு மேல் மணல் அள்ளியிருக்கிறார்கள். வண்டல் மண்ணைத் தாண்டி, களிமண் தெரிகிற அளவுக்கு எல்லா இடங்களிலும் மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. ஆக, ஆறு பாழாகிவிட்டது; ஆற்றையே அழித்துவிட்டார்கள்’ என்று எக்ஸ்பர்ட் கமிட்டி தன்னுடைய முடிவை தெரிவித்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், மணலை எடுத்தவர்களே ஆழப்படுத்திய இடத்தை நிரப்பவேண்டும். அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டு இருப்பதால், இயற்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இனி ஐந்து ஆண்டுகளுக்கு அந்த இடத்தில் மணல் அள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் அரசு தரப்பிலும், தாமிரபரணியிலும் பாலாற்றிலும் மணல் அள்ளவே கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த இரண்டு ஆண்டுகளில்தான் மிக அதிகப்படியாக மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா ஆறுகளிலும் மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இனி இப்படி நடக்கக் கூடாது என்பதால், இதைக் கண்காணிக்க நெல்லை, திருச்சி, கோவை, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களுக்கும் தனித்தனியாகக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுக்கள் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் இயங்கும். அந்தக் குழுக்கள் மணல் அள்ளுவது தொடர்பாக வருகிற வழக்குகளை விசாரிக்கும். அதேபோல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுமைக்கும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு சார்பாக, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். மறுநாள், வழக்கில் தங்களையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும்; தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மனு போட்டார்கள். அதில், ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால், தேவையான மணல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அதனால், பொக்லைன் பயன்படுத்த அனுமதி அளிக்கவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், நீதிபதிகள் இதை பரிசீலனை செய்யமுடியாது என்று கூறிவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி கட்டற்ற வகையில் மணல் அள்ளப்படுகிறது. கேரளாவில் பொக்லைன் பயன்படுத்தவே கூடாது; மீறுபவர்களுக்கு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு சிறை தண்டனை. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளுகிறார்கள். எனவே, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்தச் சட்டங்கள் எப்படி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை எப்படி நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வுக்குழுக்கள் ஆய்வுசெய்து வருகின்றன.

மணல் சாதாரணமாக உருவாகிவிடாது. ஆற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே பாறைகளையும் கற்களையும் கரைத்து மணல் உருவாகும். ஒரு கன அடி மணல் உருவாக கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அதேபோல், தண்ணீரையும் சுத்தப்படுத்தி, பூமிக்குள் நீரை சேமித்து வைக்கக்கூடிய திறனும் மணலுக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட மணலை அள்ளிவிட்டால், வெள்ளம் வந்தாலும் நீர் நிலத்தில் தங்காது; கடலில் கலந்து வீணாகிவிடும். ஊற்றும் இருக்காது. கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. மணல் இருந்தால்தான் கோடைகாலத்தில் தண்ணீர் கிடைக்கும். இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்’’ நல்லக்கண்ணு வேதனையோடு முடித்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51கி&யின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால், இது கட்டாயமான விதி அல்ல என்பதால், யாரும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் விதியாக அல்லாமல் அதைக் கடமையாகவே பின்பற்றவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

- சா.இலாகுபாரதி

nandri- thenoli inaiya ithal