சாலையோரத்தில் கருக்கள்: தனியார் ஆய்வக மேலாளர் கைது
First Published : 26 Jul 2011 03:57:50 PM IST
Last Updated :
திருச்சி, ஜூலை 25: திருச்சியில் சாலையோரத்தில் குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்தது தொடர்பாக தனியார் ஆய்வக மேலாளரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர். திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் புதை சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சாலையோரத்தில் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு, குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பஞ்சப்பூர் கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், போலீஸôர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தில்லைநகரில் உள்ள தனியார் ஆய்வகத்தின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அருகேயுள்ள மருத்துவக் கல்லூரியிலிருந்து கலைந்து போன கருக்களை பரிசோதனைக்காக வாங்கியது தெரிய வந்தது. இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதால், இந்தக் கருக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு மயானத் தொழிலாளர் நல்லுவிடம் ஆய்வக மேலாளர் விஜயராகவன் கூறினாராம். அதை எடுத்துச் சென்ற நல்லு அவற்றை சாலையோரம் வீசி விட்டுச் சென்று விட்டது தெரிய வந்தது. அப்போது, நல்லு மது அருந்தியிருந்ததால், இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும், இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்ததாக விஜயராகவனை போலீஸôர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
No comments:
Post a Comment