Monday, 25 July 2011

சாலையோரத்தில் குழந்தை கருக்கள்

சாலையோரத்தில் குழந்தை கருக்கள்
First Published : 25 Jul 2011 02:33:05 PM IST


திருச்சி,  ஜூலை 24: திருச்சியில் சாலையோரத்தில் குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்ததால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி- மதுரை சாலையில் பஞ்சப்பூரில் புதை சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சாலையோரத்தில் பரிசோதனை மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கருக்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு வீசப்பட்டு இருந்தன.சுமார் 50-க்கும் அதிகமான டப்பாக்களில் குழந்தை  கருக்கள் அடைக்கப்பட்டு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.எடமலைப்பட்டிப்புதூர் போலீஸôர் சென்று அவற்றைப் பார்வையிட்டனர். அப்போது, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவப் பரிசோதனை மையத்தின் பெயர் அந்த அட்டைப் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீஸôர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து திருச்சியில் உள்ள மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் கூறியது:மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகிய இடங்களில் இதுபோன்ற வளர்ச்சியடையாத, இறந்த நிலையில் உள்ள குழந்தையின் கருக்கள் மாணவர்களின் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும். ஆனால், அவற்றை சாலையில் வீசுவதற்கு அவசியமில்லை. ஆனால் இத்தனை கருக்களை ஏன் வீசிச் சென்றனர் என்பது மர்மமாக உள்ளது. மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரியில் பணிபுரியும் யாரேனும், நிர்வாகத்தை பழி வாங்கும் எண்ணத்தில், பரிசோதனை மையத்தில் சோதனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த குழந்தைக் கருக்களை திருடிக் கொண்டு வந்து வீசிச் சென்றிருக்கலாம் என்றனர் அவர்கள்.
nandri- dinamani daily 25-07-2011

No comments:

Post a Comment