Thursday, 25 August 2011

"மின்னணு கழிவுகள்தான் மிகவும் அபாயகரமானவை'

"மின்னணு கழிவுகள்தான் மிகவும் அபாயகரமானவை'

First Published : 25 Aug 2011 02:27:14 PM IST


திருச்சி, ஆக. 24: மின்னணு கழிவுகள்தான் தற்போதைய சூழலில் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன என்றார் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர். ராமச்சந்திரன்.  திருச்சியில் "என்விரான் சொல்யூஷன்ஸ்' நடத்திய கனரக உலோகக் கழிவுகள் மற்றும் முறையற்ற கழிவு மேலாண்மையால் ஏற்படும் சூழல் கேடுகள் குறித்த கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:  "தற்போதைய சூழலில், செல்போன், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவற்றின் "மின்னணு கழிவுகள்' மிகுந்த அபாயகரமான கழிவுகளாக அறியப்படுகின்றன. இப்போதைக்கு இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவற்றைப் பிரித்து பயன்படுத்த முடியாதவற்றை அழிக்கும் முறையைப் பரிசோதனை முறையில் மேற்கொண்டு வருகிறோம்.   மருத்துவமனைகளில் பாதரசப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கும் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2785 தொழில்சாலைகள் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளன' என்றார் ராமச்சந்திரன்.    தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர் டாக்டர் வித்யா ஹரி ஐயர் பேசியது:  "பல் மருத்துவத்தில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாதரசத் துளிகளை முறையாக- பாதுகாப்பாக அகற்றத் தேவையான வசதியை பல் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும். தற்போது பலரும் இந்த முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  பல் மருத்துவத்தின் போது வெளியாகும் கழிவுகளை சிவப்பு, மஞ்சள் நிறப் பைகளில் தனித்தனியாகச் சேகரிக்கிறோம். யார் பொறுப்பு? என்ற கேள்விக்கு யாரும் யாரையும் குறை சொல்லி- அல்லது கையைக் காட்டித் தப்பித்துக் கொள்ளாமல், ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.  தொடர் ஓட்டத்தின் போது கையிலிருக்கும் குச்சியை  அடுத்தவரிடம்தானே கொடுக்கப் போகிறோம் என்று இருந்துவிட முடியுமா? அதைப் போலத்தான் சுற்றுச்சூழல் கேடும்' என்றார் வித்யா.  கோவை "ஓசை' அறக்கட்டளையின் இயக்குநர் கே. காளிதாசன் பேசியது:  "வெளிநாட்டு விலங்குகளைத் தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால், நம்நாட்டுப் பறவைகளை, விலங்குகளைத் தெரியவில்லை. உலகில் 3 லட்சம் முதல் 3 கோடி வரை உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனிதன்.  விலங்கினங்களும், பறவையினங்களும் காப்பாற்ற வேண்டும் என்று கோருவது, அவற்றின் மீதான கரிசனத்தினால் அல்ல. அவை அழிவதால் இந்த இயற்கைச் சூழல் கெடுகிறது. பாதிப்பு மனிதனை வந்தடைகிறது' என்றார் காளிதாசன்.  "விஎன்எஸ் என்விரோ பயோடெக்' நிறுவன இயக்குநர் என். ஜெகநாதன் பேசியது:  "இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் கழிவுகளில் 51 சதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன அல்லது முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு 160 லட்சம் டன் குப்பைக் கழிவுகள் உற்பத்தியாகின்றன.  ரூ. 7.5 லட்சத்தில் குப்பைக் கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு அளித்திருக்கிறோம். இந்த ஓர் இயந்திரத்தின் மூலம் 7 டன் குப்பைகளை உரமாக்கலாம். 10 ஆண்டுகள் ஆயுள் கொண்ட இந்த இயந்திரத்தால் ஒரு மாதத்துக்கு குப்பைகளை உரமாக்க சராசரியாக ரூ. 7 ஆயிரம் மட்டுமே செலவாகும்' என்றார் ஜெகநாதன்.  "என்விரான் சொல்யூஷன்ஸ்' அமைப்பின் இயக்குநர் ஜி. அருண் செந்தில் ராம் பேசியது:  "மனிதன் என்ற உயிரினத்துக்கு மட்டும்தான் தலைக்கனம் உள்ளது. நாம் மட்டும்தான் இந்த உலகில் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். செல்போன், கணினிகள் போன்றவற்றால் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 4.80 லட்சம் டன் கழிவுகள் வெளியாகின்றன.  இதற்காக இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது, பலருக்கும் பயன்படுத்தக் கொடுப்பது, மறுசுழற்சி முறையில் அவற்றின் கழிவுகளை அகற்றுவது என மூன்று முறைகளைக் கையாளலாம்' என்றார் அருண் செந்தில் ராம்.  கருத்தரங்கை எம்ஏஎம் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.ஏ. மாலுக் முகமது ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத் தலைவர் கே. கோவிந்தராஜ் வாழ்த்திப் பேசினார்.

nandri- dinamani daily

காடுகளில் எதையும் விட்டுவரவும், எடுத்துவரவும் வேண்டாம்!

காடுகளில் எதையும் விட்டுவரவும், எடுத்துவரவும் வேண்டாம்!
First Published : 25 Aug 2011 02:27:29 PM IST


திருச்சி, ஆக. 24: காடுகளுக்குச் சென்றால் நாம் எடுத்துச் செல்லும் எதையும் அங்கே விட்டு வரவும் வேண்டாம், அங்கிருந்து எதையும் எடுத்து வரவும் வேண்டாம் என சுற்றுலாப் பிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கோவையைச் சேர்ந்த சூழலியலாளர் கே. காளிதாசன்.   திருச்சி தூய வளனார் கல்லூரி "செப்பர்டு' விரிவாக்கத் துறை மற்றும் மாவட்ட வனத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற "சர்வதேச காடுகள் ஆண்டு 2011' கொண்டாட்டத்தில் அவர் மேலும் பேசியது:  "மூலிகைச் செடிகள் என்பதை அறிந்து கொள்ள பல ஆண்டு வரலாறு தேவைப்படுகிறது. இப்போது தேவையில்லை என்று பிடுங்கி எறியப்படும் செடிகள் ஒரு காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கும் மருந்தாகலாம்.  துளசியை மருந்தென்றும், அரிசியை உணவென்றும், அரளியை விஷமென்றும் தெரிந்து கொள்ள மனிதகுலத்துக்கு பல ஆண்டுகள் ஆனதைக் கவனிக்க வேண்டும். எனவே, இயற்கையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து நிறைய புரிந்து கொள்ள வேண்டும்.  ஆறு எப்படி உருவாகிறது என்ற கேள்வி எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை. மனிதர்களால் காயப்படுத்தப்படாத மலை உச்சிகளில் இருந்து உருவாகும் ஓடைகள் ஒன்றாகச் சேர்ந்துதான் ஆறுகள் உருவாகின்றன.  மலை உச்சியிலுள்ள புல்வெளிகளில் இயற்கையாகவே அமைந்த மெத்தைகளைப் போன்ற பரப்பில் பெய்யும் மழை, அங்கேயே சேமிக்கப்படுகிறது. இதுபோன்ற மெத்தைகள் ஒரு சென்டிமீட்டர் உயரத்துக்கு உருவாக ஓராண்டு ஆகும் என்கிறார்கள். இவை "சோலைக் காடுகள்' என்றழைக்கப்படுகின்றன.  இந்தப் பகுதியிலுள்ள புல்வெளிகள் இந்தத் தண்ணீரில், 5 சதத்தை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. மற்றவை அப்படியே அந்த மலை இடுக்குகளில் சிறு சிறு ஊற்றுகளாகி, ஓடைகளாகி, தரையில் எல்லாம் கலந்து ஆறுகளாகின்றன.  வடிகால் என்றால் எப்போதாவது ஓடுபவை, ஆறுகள் என்றால் எப்போதும் ஓடுபவை. ஆனால், இப்போது நாட்டில் ஆறுகள்தான் எப்போதாவது ஓடுபவையாகிவிட்டன.  தென்னிந்தியாவைக் காக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விட்டோம். மலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருள்களை, பிளாஸ்டிக் கழிவுகளை, பாட்டில்களை அந்த மலைகளில் வீசியெறிந்துவிட்டு வருகிறோம்.  பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பறவைகள், விலங்கினங்கள் அழிகின்றன. அவை அழிந்தாலும் மரங்கள் அழியும். எனவே, காடுகள் என்பவை விலங்கினங்கள், பறவையினங்கள் வாழும் வீடு. அவற்றுக்குள் மனிதர்கள் அத்துமீறித்தான் நுழைகிறோம்.  அந்தக் காடுகளைக் காக்க, அங்கே சென்று மரம் நட வேண்டாம், விதைகளைத் தூவ வேண்டாம், உரம் போட வேண்டாம். எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!  காடுகளுக்குள் சென்று திரும்பும்போது, நாம் எடுத்துச் சென்ற எதையும் விட்டுவிட்டு வரக் கூடாது; அங்கிருந்து எதையும் எடுத்து வரவும் கூடாது. இதுபோதும். அந்தக் காட்டின் நினைவுகளையும், புகைப்படங்களையும் மட்டும் நம்முடன் எடுத்துவரலாம்.  அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற மிச்சமிருக்கும் காடுகளையாவது காப்பாற்றுவோம். இயற்கையை நேசிக்க வேண்டும். நேசிப்பது என்பது வேறு, ரசிப்பது என்பது வேறு.   புவிவெப்பமயமாதல் இதே நிலையில் தொடர்ந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும். 10 நிமிஷங்கள் சுனாமி வந்தபோதே இந்தப் புவியில் உயிரிழந்தவர்கள் ஒரு லட்சம் பேர். எனவே, மேலும் மேலும் "கார்பன்' உருவாவதைத் தடுப்போம், உருவாகும் "கார்பனை' எடுத்துக்கொள்ளும் மரங்களை வளர்ப்போம்' என்றார் காளிதாசன்.  நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வன அலுவலர் பி. சொர்ணப்பன் பேசும்போது, உடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நுரையீரல் எப்படி முக்கியமோ அப்படித்தான் மரங்களும் எனக் குறிப்பிட்டார்.  நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் அருள்தந்தை ஏ. ஆல்பர்ட் முத்துமாலை தலைமை வகித்தார். துணை முதல்வர் அருள்தந்தை பி. ஜான் போஸ்கோ வாழ்த்திப் பேசினார். விரிவாக்கத் துறை இயக்குநர் அருள்தந்தை எஸ். அருள்தாஸ் வரவேற்றார். மாணவி எஸ். செலின்பிரபா நன்றி கூறினார்.  இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுதொடர்பான ஒளிப்படக் காட்சிகளும் காட்டப்பட்டன.   இதற்கான ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
nandri- dinamani daily

Friday, 19 August 2011

தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்!



தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்
அன்பாதவன்


"கடைசி டினோசர்
ஒற்றையாய் ன்று கொண்டிருக்கிறது
அதன் ரோமங்கள் தொய்ந்து
களைத்துக் கிடந்தன
கடுங்கோடை இலைகள் உதிர்ந்து,
இலைகளுக்கு உள்ளே
மறைவதைப் பார்த்துக்கொ ண்டிருக்கிறது
அதன் கழுத்தில் அமர்ந்து
ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சி
போகட்டும் என்று பொறுத்திருந்தது
இன்னும் சில வினாடிகளில்
கழுத்தைத் தாழக் குனிந்து
விஷக் கற்றாழையைக்
கடிப்பதற்காய் காத்திருக்கிறது
இதுவரை
பார்க்கப்படாதப் பறவைகள்
தொலைவிலிருந்து கத்துகின்றன
சீக்கிரம் செத்துப் போ
சீக்கிரம் செத்துப்போ"

-தேவதச்சன்(1)


நம் கண் முன்னே கரைந்து காணாமல் போகும் 'இன்றைப்' போலவே நாம் பிறந்து,வளர்ந்து, நம்முடன் விளையாடிய இயற்கையும், சுற்றுச்சூழலும் ஒன்னொருக் கணத்திலும் இறந்துக் கொண்டே இருப்பதை, சூழலியலில் ஆர்வம் கொண்டவர் அறிவர்.சூழலியல் குறித்த கவலையும்,அக்கறையும் இன்றையச் சூழலில் தவிர்க்க இயலாத அம்சமாக வளர்ந்து வருகிறது

சூழலியல் என்பது வேறொன்றுமில்லை!நாம் வாழும் பூமி... நாம் காற்று வாங்கும் கடல்,தினமும் பார்க்கும் ஆகாயம்,தினசரி நுகரும் நீர், சுடும் நெருப்பு, நொடிகளொன்றிலும் சுவாசிக்கும் காற்று. நம்மை நம்மைச் சுற்றியிருந்து நமக்கு பயனளித்து வந்த இந்த அய்ம்பூதங்களுக்கு, அந்த நண்பர்களுக்கு நாம் செய்த கைமாறு என்ன? எவ்வளவுக்கெவ்வளவு சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்-கவ்வளவு மா'சுபடுத்தினோம்.கடலில் அணுக்கழிவுகளையும் வேதிக்கழிவுகளையும் கொட்டி அலைகடலைச் சீரழித்து கடல்வாழ் உயிரினங்களை கொலை செய்கிறோம்... ஏரியாய்.. குளமாய்..நதிப்படுகைகளாய் இருந்த இடங்களை ஏரியா ஏரியாவாய் மனைபோட்டு கூவிக்கூவி விற்கிறோம்.

நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அரசு கட்டடங்களை, பேருந்து லையங்களை உருவாக்கிவிட்டு மழைநீர் சேமிக்கச் சொல்லி சட்டம் போடுகிறோம். தொழிற்சாலைகளின் கழிவுப் புகைகளினால் காற்று மண்டலத்தை கரியாக்குகிறோம். ஓசோன் படலத்தைக் கிழித்து விட்டு உஷ்ணம்.. வெப்பம் எனக் கூச்சலிடுகிறோம்.

நாம் செய்கிற காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி, நமக்கே துன்பங்களை கொடுக்கும் என்று தெரிந்தும் தொடர்ந்து இது மாதிரியான சூழல் கேட்டினை செய்துக் கொண்டே இருக்கிறோம்

வனங்களின் அழிவு, நதிகளின் அழிவாய்..மறைவாய்ப் போனதை நாமின்னும் உணர்ந்த்வரில்லை.குட்டிப்பையனின் வெடிப்பும், செர்னோபில் விபத்தும் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கூடங்குளம் காட்டுகிறது. கடலில் கழிவுகளைக் கொட்டிவிட்டு கரைகளை அழகுப்படுத்த முயற்சிப்பவர்களாகத்தான் நாமிருக்கிறோம்.

"சுற்றுச்சூழல் சிதைவுறும்போது ,அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தாம். மலைவாழ் பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என இயற்கைச் சூழலின் சிதைவு வெவ்வேறுப் பரிமாணங்களில் நீர், நிலம், காற்று மற்றும் உயிரின வளம் இவற்றின் சீரழிவாக வெளிப்படும்போது முதலடி வாங்குபவர்கள் இவர்களே (2) "என சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாசுகரன் கூறுவதை நாம் கவனத்தில் கொண்டோமா?

'இன்றையச் சூழலின் நெருக்கடிகளையும், நெருக்கடிகளிலே அமிழ்ந்துபோகாத திமிறல்களும் உணர்வுகளும், எதிர்வினை கொள்கிற ஒரு சமூகத் தேவையை நமக்கு தந்திருகின்றன. சீரழிந்துவரும் பண்பாட்டுச் சூழல்களை மறுபரிசீலனை செய்யவும், புத்துருக் கொடுத்து மனிதவயப்படுத்தவும் நேரம் வந்திருக்கிறது..இதை உணர்ந்திடும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இன்னும் புதிது புதிதாய்த் தோன்றியாக வேண்டிய ஒரு சூழ்லை-ஒரு கட்டாயம் ஏற்பட்டு வருகின்றது'-(3) என்கிற இலக்கியத்திறனாய்வாளர் பேரா.தி.சு.நடராசனின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்கன.

கவிஞர்கள் என்பவர்களும் நம் சமூகத்தில் ஓரங்கம்தான். சமூகத்தின் கழ்வுகளில் கவலையும், அக்கறையும் தீர்வுகளைத்தருகிறப் பார்வையோடும் விமர்சனத்தோடும் கவிதைகள் பிறப்பின் படைப்பாளிக்கும், மொழிக்கும் சிறப்பாக அமையும். தமிழில் மேற்சொன்னக் குணங்களோடு பரவலாக பல கவிதைகள் சூழலியல்குறித்து விவாதிக்கின்றன.. விமர்சிக்கின்றன.. வழிகாட்டுகின்றன....!

'இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது
தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது
கடல் இனிது; மலை இனிது; காடு நன்று
ஆறுகள் இனியனனௌலோகமும் மரமும் செடியும், கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் 'மிகவும் இனியர்'(4)


ஆஹா...! மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை. ஆனால் நடைமுறையில் பாரதி சிலாகிப்பதுபோல் உலகம் இனியதாகவா இருக்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியின் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்? கசப்பான மவுனம் தானே!

அறிவியல், தொழில்நுட்பம் என்ற பெயரில் வரைமுறையில்லா வளர்ச்சியில் வேகமாக நகரும் இன்றைய யதார்த்த உலகில் சூழலியல் பிரச்னை மிகமிக முக்கியமாய் பரிசீலிக்கப்பட வேண்டிய அம்சம்., ஆனால் லாபத்தை, சுயநலத்தை, குறுகிய மனப்பான்மையை மட்டுமேஇலட்சியமாய்க் கொண்ட சிலர் பலர் வாழவேண்டிய பூமிப்பந்தினை தன்னிஷ்டம்போலஉதைத்து விளையாடுவதும், நீர்லைகளை, காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதும் எதிர்க்கவியலா அள்வில் போவதை நம்மில் பலர் சாட்சிகளாய் ன்றுபார்த்து கொண்டுதானே இருக்கிறோம்.

'இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகளாக அமைந்துள்ளன. எந்த ஒரு வளர்ச்சிக்கான நடவடிக்கையும் அது செயல்படும் சுற்றுச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிடில் நீண்டநாட்களுக்கு நீடிக்க முடியாத ஒரு லைக்கே இட்டுச்செல்லும்'(5)

நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் -என்ற அய்ம்பூதங்கள் குறித்து தமிழ்க் கவிஞர்களின் சூழலியல் குறித்த பதிவுகளை விரிவாய்க் காண்போம்.

நிலம்
நிலம்
'நமது நிலம் நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்:
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண்திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போது,எப்படி அறுவடை செய்வது என்பது பற்றியும்
மகசூலைப் பகிர்ந்து கொள்வது பற்றியும்
நமது வயிற்றை நிரப்பிக் கொள்வது பற்றியும்'
......(6)


பசிய வயல்களும் நீண்டு நெடிதுயர்ந்த மரங்களும், பூத்துக் குலுங்கும் கொடி, செடி...தாவரங்களைத்தான் பூமி உருண்டையின்பிம்பம் நமக்கு பிள்ளைப் பருவம் முதல் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆனல் நிஜமென்ன..?விளைநிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக.. நகரங்கள், மாநகரங்களின் நீர்வழியடைத்து,கட்டடங்கள் முளைத்த கான்கிரீட் காடுகளாய் மாறிப்போயின. பறவைகள் அமர மரக்கிளைகளுக்குப் பதிலாய் ஆந்தெனா, டிஷ், செல்லுலார் கோபுரங்கள்' இப்படியொரு சிமெண்ட் சிறைக்குள் அகப்பட்டுத் தவிக்கும் கவிஞன் ஒருவனின் குரலிது:

"கட்டடங்களுக்கு நடுவே/ஒற்றை மலர்/எப்படி வரும் வண்ணத்துப்பூச்சி?"-ஆசுரா

ஒருமரம் சுமார் 17,50,000 மதிப்புள்ளபயனளிப்பதாக குறிப்பிடுகிறார்சூழல் ஆர்வலர் திரு.வின்சென்ட்.

மர(ண)ம்
குறிஞ்சியும் மருதமும் அழியவிரிகிறது பாலை அனல் பரப்பி...
சிநேகமான சுரபன்னை வனங்களை விழுங்கி
அடுக்ககங்களின் நிழல் பெருக்கியவர்களை
சீற்றத்துடன் தண்டித்தது ஆழிப்பேரலை
முள்தோப்பின் குயிலிசையை விரட்டியதுவெட்டுக்கத்தியின் ஓசை
மரம் வெட்டிய ஒருத்தனைத்தேடி அழித்தது
சிறப்புப்படை வனத்தொகுப்பை
தங்க நாற்கரங்கள் சீவித்தள்ளுகின்றனசாலையோரத் தருக்களை
வீழ்ந்த விருட்சங்களின் மீது கேலியாய்ப் படிகிறது
வேகவாகனங்களின் கருப்பு எச்சில்
அலட்சியத் தீப்பொறிதீயோவியம் தீட்டும் காற்று
சாம்பலாய் மலைவனம்
மரங்களை வெட்டிக் கொன்றுநீர்க்குழாய்ப் பதிப்பு
எப்படி வரும் மழை
தோப்புகள் மறைந்து விசுவரூப அடுக்ககங்கள்
வீட்டுக்குள் தொட்டி மரங்கள்
கேபிள் வயர்களில் மலர் தேடும்
தேன்சிட்டு மரங்களில்லா ஊரில்
ஓசோன் கிழிந்த உக்ரவெப்பம் காறித்துப்பும்
தருக்களை அழித்த உலகை

-அன்பாதவன்
(4)

மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரிகளில் நெகிழி(பிளாசுடிக்) முதன்மையானது. மழைநீரை மண் உறிஞ்சவிடாமல் தடுப்பதோடு, மண்ணோடு செரிமானமும் ஆகாமல் நீண்டகாலத் தொந்திரவாய் நெகிழிகள். படிக்காதவர்கள், நாகரீகமில்லாதவர்கள் என 'மெத்தப்படித்தவர்களால்' முத்திரைக் குத்தப்பட்ட ஆதிவாசிகள் இயற்கையை மிகஎளிதாய், இலாவகமாய் இயல்பாய் புரிந்து வைத்திருப்பதைப் பாருங்கள்:

"எங்களது ஆடுகள் கானகங்களில் மேயப்போய்
மான்களோடு கலக்கின்றன
புலிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டுப் போய்விட
இதற்காக நாங்கள் புலிகளை வேட்டையாடுவதில்லை
ஏனெனில் அவற்றிற்கு என்றும் உரிமைகள் உள்ளன"(7)


இயற்கையின் சம உரிமையை நம்மில்பலரும் சரிவரப் புரிந்து கொள்ளாததாலேயே எதிர்விளைவுகளால் இன்னல் பட்டுக்கொண்டிருக்கிறோம். நெகிழிகளால், வேதியியல் கழிவுகளால், கான்கிரீட் சுமைகளால்நமது நிலங்கள் நாசமாகாமல் தடுக்க என்ன செய்திருக்கிறோம்?'ஆடுகளுக்குத் தழை, மேய்ப்பவருக்குப் பழம்'-எனத் தரும் இயற்கையை அழித்துவிட்டோமானால் யாருக்குமே எதுவுமே கிடைக்காமல் போய்விடும் அபாயத்தை புரிந்திருக்கிறோமா?"எழுகின்றன நூறு வினாக்கள்..

இந்த விளைவுகளுக்கு யார் காரணம்?
விடைகளாய் வருகின்றனசிலரின் அனுபவங்கள்
வேண்டுவதோ மழைநீர் அறுவடை
மக்கள் நிகழ்த்துவதோவிதைநீர் ப் படிகொலை"
-(8)

-திட்டவட்டமாய்ச் சொல்லும் க்ருஷாங்கனியின் கவிதை காரணங்களாய் விரிய ,இரா.மீனட்சியோ ஒரு மருத்துவ அறிவுரை வழங்குகிறார்:

'மண்தாய்க்கு அவசரம்
தோல்மாற்று அறுவை சிகிச்சை'
(8)

நீர்

நீருக்குத்தான் பூவுலகில் எத்தனை முகங்கள்! மழை, பனி, அருவி, நதி, கடல், ஏரி, குளம், கிணறு இப்படி தண்னீர் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை? இயற்கையோடு இனியதொரு தோழமைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் மிகவும் அருமையாக நீண்ட காலத் திட்டமிட்டு ஊர்களை, நகரங்களை நிர்மாணம் செய்தார்கள்.தாழ்வானப் பகுதிகளில் குளத்தையும்,வாய்க்காலையும் வெட்டினார்கள் நதி வெள்ளம் பொங்கி நாச நர்த்தனமாடினாலும் மனிதர்க்கு தொல்லையில்லாத வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.கடலலைகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வகையில் கரைக்கு மிகத்தள்ளி வீடுகள் அமைக்கப்பட்டன.ஆனல் இன்றைய நிலையென்ன..?குளத்தை, ஏரிகளை, நதிப்படுகைகளை தூர்த்துதான் பேருந்து நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்,குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் சுழற்சி முறை பதிப்படைவதோடு பெருமழைக்காலங்களில் வெள்ளம் தன் அகன்ற அலைவாய்த்திறந்து மக்களை,உடைமைகளை ,உயிர்களை அள்ளி விழுங்குகிறது.

'வருஷந்தோறும் பொழிகிறது மழை
இடிந்து விழுகிற கட்டடங்கள்
சிதைந்த உடல்கள் பார்த்து
'உச்' கொட்டி பெருமூச்சு விட்டு
கடவுளை சபித்து நகர்கிறது
வேகமாய் மாநகர வாழ்வு'-


என்கிற அன்பாதவனின்வரிகளில் தெரியும் குரூர யதார்த்தம்தான் இன்றைய சூழல்.ஆனால் கருத்த மேகங்கள் கண் சிமிட்டி கலைந்து போய்விட்டால் இராம.பிரபு எழுதியதுதான் உண்மையாகி விடும்:

'சரியாய்த் தான் எழுதினான்
மாணவன்
பாழாறு'


மணல் லாரிக்காரர்கள் தினம் கொள்ளைக் கொண்டால் நதிகள் யாவுமே பாழாறு தானே!
(5)

திசம்பர் 2004-ல் கோரத்தாண்டவம் ஆடிப்போன ஆழிப்பேரலை குறித்தப் பதிவொன்று:'

'இன்னுமா அடங்கவில்லை இயற்கை அன்னையே உந்தன்பசி
பொறுமைக்கு உன்னைத்தான் பெருமையாய்ச் சொல்லிவந்தோம்
சீறிப் பொங்கிவந்து-இன்று பாரில் பழி சுமந்தாய்
கடலூர் கலங்குகின்றது;நாகை நடுங்குகின்றது
கன்னியாகுமரியோ கண்னீர் சிந்துகிறது
பாண்டி பதற,சென்னை சிதறுகிறது
இன்னுமா அடங்கவில்லை இயற்கை அன்னையே உந்தன்பசி'

(நடவு 12)

அசோகனின் வரிகளில் மனிதாபிமானம் மிளிர்ந்தாலும் இயற்கை சீற்றம் குறித்துமுன்னெச்செரிக்கைகள் தந்தும் காப்பாற்றிக் கொள்ளாத அலட்சிய மனிதருக்கு கடல் தந்த பெருந்தண்டனையோ சுனாமி! கடல் நீர் மாசுபடுவதைக் கூட அழகாய்ச் சொல்கிறது மித்ராவின் ஹைகூ:

கடல் நெடுக/மயிற்பீலிகள்/தூரத்தில் எந்திரப்படகு'


அதே நேரம் நதிநீர் இணைப்புகுறித்த சமூக உணர்வை பதிவு செய்கிறார் பெரணமல்லூர்சேகரன்:

"வீணாகும் ஆற்றுநீர்/தேனகும் இணைப்பால்/இணைப்போ கானல்நீர்'


எல்லாம் சரிதான்! எதார்த்தமென்று ஒன்றிருக்கிறதே...ஆர்.எஸ்.நாதனின் இந்தக்குரலைக்கேளுங்கள்.. உணர்வீர்கள்:

'மழை அழகுதான்/வீடு/ஒழுகாத வரை"


நெருப்பு

'தீ' குறித்த சூழலியல் சிந்தனையோடு தமிழ்க்கவிதைகள் பரவலாய்த் தென்படவில்லையென்பதோர் குறிப்பிடத்தக்க செய்தி.அதிகமாய்த் தீண்டினால் சுடுமென்பதாலா?அறிவியல் சிந்தனை சார்ந்த படைப்பாளி நெல்லை சு முத்து -வின் ஒரு மரபுக்கவிதைத்துண்டு 'வனத்தீ' குறித்து கவலைக்கொள்கிறது:

"காட்டுக்கே தீவைத்துக் கரி யெடுத்துக்
காற்றுக்கே கரியமில வாயும் கூட்டி
மோட்டுக்கு மேலாயாம் கதிர வன்தன்
மூச்சாகும் அனல்காற்றைப் புவிக்குள் தேக்கி
வீட்டுக்குள் நிம்மதியாய் உறை வதென்ற
விளையாட்டா? கண்ணாடி அறைவி ளைவால்*
நாட்டுக்கே அழிவுவரும்! ஞாலம் சாகும்
ஞாயிறொளித் தீவிரத்தில் ஊழி மாறும
�"(9)
*(GREENHOUSE EFFECT)

இயற்கையோடு இசையும் எரியும் சோகத்தைப் பிழிகிறது மித்ரா-வின் இந்தக்கவிதை':

"காட்டுத்தீ மூங்கில்காடு/கண்ணில் நீர்/சங்கீதச் சாம்பல்"

" சுற்றுச்சூழல்கேடு காரணமாக உலகின் சூடு அதிகரித்து பல மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறோம்.பல்வேறு பனிப்பிரதேசங்கள் காணாமல் போய்விடுகின்றன. பல பகுதிகள் கடலுக்குள் அமிழத்தொடங்கிவிட்டன.பனிப்பிரதேசங்கள் உருகி இயற்கை காப்பு நிலை சிதைந்து வருகிறது.இந்த அபாயம் இமயமலையையும் தொட்டிவிட்டது"-என்கிற சுப்ரபாரதிமணியனின்(படைப்புமனம்)எச்சரிக்கைவரிகள் தீயாய்ச் சுடுபவை.


nandri- varppu.com

TamilNotes.com

TamilNotes.com

Thursday, 18 August 2011

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்!


பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்

First Published : 17 Aug 2011 08:11:43 PM IST


திருச்சி, ஆக. 16: வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.   இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு விவரம்:  "புவி வெப்பம் அதிகரிப்பிற்கு ஒரு காரணம் நாள்தோறும் பெருகி வரும் வாகனங்கள். பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத சூழலில் நடுத்தர, ஏழை மக்களும்கூட, கடன் வாங்கியாவது கார், இரு சக்கர வாகனம் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  தேவைக்கும் குறைவான பேருந்துகள், வசதியில்லாத - பராமரிப்பில்லாத பேருந்துகள், நேரத்துக்கு வராத பேருந்துகள், சாலையோரங்களில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெறும் சுரண்டல்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.   இதனால், ஏற்படும் வாகனப் பெருக்கத்தால் கூடுதல் எரிபொருள் செலவாகி, புகை வெளியேறுதல் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசடைகிறது. இவற்றின் காரணமாக பருவநிலை மாறுதல், ஓசோன் படலத்தில் பாதிப்பு போன்ற பிரச்னைகளும் உருவாகின்றன.   எனவே, மக்களின் தேவைக்குத் தக்கவாறு கூடுதல் பேருந்துகளை வாங்க வேண்டும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். காலாவதியான பேருந்துகளை இயக்கக் கூடாது. குறைபாடுகளை உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும்.   சென்னையைப் போல மெட்ரோ ரயில் அல்லது தங்களின் விருப்பப்படியான மோனோ ரயில் திட்டத்தை வாய்ப்புள்ள மற்ற பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் அந்தந்தப் பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். தமிழ்நாட்டு எல்லைக்குள் கூடுதலான ரயில் போக்குவரத்துக்கும், இரு வழித்தடங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.   இவையெல்லாம் செய்தால் மக்களுக்கு பொதுப் போக்குவரத்தில் நாட்டம் பிறக்கும். நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்கும் எண்ணிக்கை குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாகக் குறையும்.  எனவே, இதுதொடர்பாக எதிர்வரும் செப். 16 உலக ஓசோன் தினத்தன்று தங்களின் அறிவிப்புகள், திட்டங்களை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, 16 August 2011

இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?

இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

 இரும்பு சத்தின் குறைபாட்டால் வரும் நோய்களே அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. 80 சதவீதம் பேர் இக்குறைப்பாட்டால் அவதியுறுவதாகவும், அதில் 33 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் அவதியுறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 நமது உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். பொதுவாக நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச் சத்து நமக்கு உணவின் மூலம் போதுமானதாக கிடைப்பதில்லை. இதனால் ஆரம்பத்தில் இரும்பின் தேவையை உடல் அதன் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நாளடைவில் இரும்புச் சத்து குறைவதால் இரத்தச் சோகை ஏற்படுகிறது.
 பெரும்பாலும் பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
 இதுபோல் சிறுகுடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் தடை ஏற்படுவதாலும், இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிறது. சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் ஹார்மோன்கள் உற்பத்தி சீராக செயல்படுத்த முடியாமல் இரும்புச்சத்து குறைவு ஏற்படும்.
 வைட்டமின் ஏ, இரும்புச்சத்தை திசுக்களுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. இந்த வைட்டமின் ஏ குறைபாட்டால் இரும்புச்சத்து திசுக்களுக்குக் கிடைக்காமல் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அறிகுறிகள்.
 பொதுவாக உடலில் இரும்புச் சத்து குறைவதனால் இரத்த சோகை உண்டாகும். அதிக தளர்ச்சி, சுறுசுறுப்பின்மை, சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்துகொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். நாக்கில் வீக்கம். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து போகும். உடல் வெப்ப நிலையை சமனாக்கி பாதுகாக்கும் செயலிலும் குறைபாடு உண்டாகும். மண், சாம்பல் போன்றவற்றை உண்பதால் இரத்த சோகை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 குடலில் வீக்கம் அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும் சோகை உண்டாகும். இவை இரும்புச்சத்து குறைவினால் உண்டானவை அல்ல.
இரும்புச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் :
 கருவுற்ற பெண்கள், சிறு குழந்தைகள், பருவ வயதை அடையும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு சுழற்சியின் போது ஏற்படும் இரத்த இழப்பால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே பருவம் அடைந்த அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து தேவை அதிகமாகிறது.
 சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.
 கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி. அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி. அளவு தேவைப்படுகிறது.
 தினசரி உணவில் 30 மி.கி. இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும்.
 அதிகமாக உடற்பயிற்சி செய்வோர்களின் இரத்த சிவப்பணுக்கள் விரைவில் இடமாற்றம் அடைகின்றன. மேலும் பழைய சிவப்பணுக்களை அழித்துவிட்டு புதியதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இதற்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. இதனால் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நல்லது.
 குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாக இரும்புச்சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சாலச் சிறந்தது. பொதுவாக இரும்புச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைப்பது சாலச்சிறந்தது. மருந்து மாத்திரைகள் மூலம் கிடைப்பது அவ்வளவு சிறப்பானதாக அமையாது.
 காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது.
 கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சிலசமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
 முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.
 முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இயற்கை

இயற்கை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

இயற்கை இயல்பாக இயன்றதை இந்த பூமி பந்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அளித்து வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கம் இந்த இயற்கையின் இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைகிறது. பெருகிவரும் மக்கள் தொகையினால் தேவைகளும் அதிகரிக்கிறது. இந்த இயற்கை இதுநாள் வரை பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கான இடத்தை, வாழ்வியல் தேவைகளை என ஜீவிப்பதற்கான அனைத்தையும் அளித்து வருகிறது. ஆனால் மனிதனின் தேவைகள் இந்த இயற்கையின் வளங்களை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி எடுப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் பசுமைப் புரட்சி (1965\-1980) தானிய உற்பத்தியில் தன்னிறவு என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் ஏராளமான அந்நிய ரக பொருட்கள் (வீரிய ரக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என) இந்த மண்ணிற்கு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் மண்ணின் இயல்பு தன்மையை அன்றைய தினம் முதலே மாற்ற துவங்கி இன்று இயற்கை சமநிலையின் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாபில் இன்று இந்த தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உரங்கள், பூச்சி மருந்துகள் இன்று அதே மண்ணின் இயற்கை தன்மையை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கீரின்பிஸ் பஞ்சாபின் மக்ட்ஸர், பதின்டா, லூதியானா ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 20 சதவிதத்திற்கு மேலான குடிநீர் கிணறுகளில் நைட்ரேட் அளவு 50 சதம் உள்ளது என கண்டறிப்பட்டுள்ளது. இது சர்வதேச சுகாதார மையம் அனுமதித்த அளவை விட அதிகம். இந்த நைட்ரேட் மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் ஆகும். செயற்கை நைட்ரேட் உரங்களின்தாக்கம் இந்த மண்ணையும், தண்ணீரையும் வெகுவாக நச்சாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த இரசாயனங்கள் மண்ணின் இயல்பு தன்மையை பயிர் உற்பத்திற்கு உதவும் அதன் குணத்தை பாதித்துள்ளது.
Sold soul of infinity life முடிவில்லா வாழ்க்கையின் உயிர் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இத்தகு மண் இயற்கை நமக்களித்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இயற்கையினால் நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்தும் இந்த மண் அளித்த மாற்று வடிவங்களே. இயற்கையை தவிர்த்து செயற்கையாக உண்டாக்கப்படும் உணவு வகைகள் இயற்கையின் தேர்வில் வாழும் மனிதனுக்கு பல உடற்கூறு தொந்தரவுகளை அளிக்கிறது.
இந்த பசுமைப்புரட்சி கால கட்டத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்ரகங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல விளைச்சலை அளித்தது. இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என விளைச்சலை அதிகரிக்கும் நோக்குவுடன் அரசு வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தின் மண்ணும் மாசுபட ஆரம்பித்து, இன்று அதன் பிரச்சனையை தமிழக விவசாயிகளும் உணர துவங்கியுள்ளார்கள். அதனால்தான் தமிழகத்தில் இன்று இரசாயனம் இல்லாத வேளாண்மை எனும் முறை வேகமாக விவசாயிகளிடத்தே பிரபலமாகி வருகிறது.
இந்த இயற்கை வேளாண்மை என்பது மீண்டும் நமது பாரம்பரிய வேளாண்மை முறைக்கு மாறுவது என்பதாகும். ஏராளமான இரசாயனங்களை இந்த மண்ணிற்கு ஊற்றி அதில் வாழ்ந்து வந்த விவசாயத்திற்கு உதவிய பல நுண்ணுயிரிகளை (சூடோமோனஸ், ப்ளேரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி) நாம் இந்த இயற்கை சமநிலையில் இருந்து அகற்றினோம் இன்று மீண்டும் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிவுகளை இந்த மண்ணிற்கு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் இயல்பு தன்மையை அதை சார்ந்து வாழும் இன்னும் பல உயிரிகள் மண்புழுக்கள், ஓட்டுண்ணிகள் என அவற்றின் உயிரி-பன்முகத்தன்மை பாதுகாத்திட தேவைப்படுகின்றன.
நமது பாரம்பரிய விவசாய முறையில் விவசாயிகளிடத்தே ஒரு விவசாய சமநிலையை பாதுகாத்திடும் செயல்முறை இருந்து வந்தது. விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதும் அவற்றின் சாணங்களை எருவாக்கி அதில் நுண்ணுயிர்கள் பல வளர்ப்பதற்கு வாய்ப்பளித்து அதனை நிலத்திற்கு அடி உரமாக இடுவார்கள். நிலத்தில் விளையும் களைச் செடிகளை புல் மற்றும் கரும்பு சோலை ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்குவார்கள். இன்று இவையனைத்தும் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மாறியுள்ளது. அடியுரமாக இரசாயனத்தை இடுவது, பயிர் வளர்ச்சியுடன் அனைத்து படிகளிலும் இரசாயன உரங்களையே ஈடுவது என இந்த மண்ணின், நீரின் இயல்பு தன்மையை வெகுவாக மாற்றியுள்ளார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக நிலத்தில் தங்கும் உப்புகள் காரணமாக நிலம் கடினமாகிறது. அதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.
மனிதர்களின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் இயற்கையில் ஏற்படும் பல விளைவுகளை இந்த மனித இனம் இன்று பரவலாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வரிகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு முறையும், வேளாண்மையும் இந்த மனித இனம் கைவிடாமல் வாழ வேண்டும் என்பதையே இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது.

nandri- ilangar mulakkam

வற்றிப் போகும் காவிரி!

வற்றிப் போகும் காவிரி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் 73 திட்டங்களுக்கு மேலாக வகுத்து 465 நூறு கோடிக் கனஅடி (டி.எம்.சி.) நீரை முற்றாகப் பயன்படுத்த விரைந்து செயல் பட்டது கருநாடக மாநிலம். இவை அனைத்திற்கும் ‘காவேரிப் பெருந்திட்டம்’ (காவேரி மாஸ்டர் பிளான்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவற்றில் பெரும் பாலான வேலைகள் முடிந்துவிட்டன.
பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, இன்னும் மூன்று ஆண்டுகளில் ‘காவேரிப் பெருந்திட்டம்’ நிறைவேறி விடும் எனக் கூறினார். அந்தப் பெருந் திட்டத்தில் வெங்காலூருக்குக் குடிநீர் வழங்குவது சேராது; சிவசமுத்திரம் அருவிக்குக் கீழே உள்ள நீர்வள மின் நிலையம் சேராது; மேகதாது திட்டமும் சேராது.
இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்குக் கருநாடகம் எந்தச் சட்டத்தையும் ஞாயத்தையும் பார்க்க வில்லை. ஒப்பந்தங்களை மீறியும் தமிழக அரசின் ஒப்புதல் இன்றியும் நடுவணரசின் நீர் ஆணையத்தையும் திட்டக் குழுவையும் நீர்வளத்துறையையும் மீறியும் நடுவணரசின் ஒப்புதல் இன்றியும் தொடர்ந்து தனிநாடு போலச் செயல்பட்டுவருகிறது.
இவற்றைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு செய்த முயற்சி மிகக் குறைவு. இவைபற்றிய உண்மைகளை ஆட்சியாளர் கள் பொதுமக்களுக்குச் சொல்வதில்லை.
கேரளத்தின் பங்கையும் கொடுத்த பிறகு தமிழ் நாட்டில் ஓடும் காவிரி வற்றிப் போகப் பத்து ஆண்டுகளே ஆகும்.
அதன் விளைவுகளைத் தமிழ்நாடு தாங்குமா?
காவிரியில் கருநாடக அரசு நிறைவேற்றிவரும் திட்டங்கள்
தற்போதுள்ளதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுமான திட்டங்கள்
எண்
திட்டத்தின் பெயர்
ஆயக்கட்டு
(எக்தேர். ஆயிரங்களில்)
பயன்படுத்தும் அளவு
(டி.எம்.சி.யில்)
1
அணைக்கட்டுக் கால்வாய்கள்
77.1
57.7
2
கிருட்டிணராசசாகர்
79.3
61.2
3
கான்வா
2.0
1.2
4
பைரமங்கலா
1.6
1.0
5
மார்க்கோனபள்ளி
6.1
4.0
6
எப்பகல்லா
1.2
0.4
7
நுபு
10.5
7.7
8
சிக்ககோலே
1.7
0.7
9
மங்களா
0.8
0.6
10
சுவருணவதி (உறுதிப்படுத்தல்-4034எக்.)
2.8
3.6
11
குண்டால் (உறுதிப்படுத்தல் - 4064 எக்.)
4.0
1.4
12
நல்லூர் அமனிக்கரை
1.3
0.3
13
காமசமுத்திரம்
3.1
0.8
14
அச்சன கோப்பலு
2.3
0.6
15
ஏமாவதி
283.6
54.7
16
ஒட்டகோலே
7.5
2.4
17
யாகாச்சி
21.5
5.7
18
கபினி
87.9
85.0
19
ஏறங்கி
54.6
18.0
20
சிக்கிடிகோலே
1.7
0.8
21
மஞ்சனபேலே
3.8
0.8
22
தரக்கா
7.0
3.2
23
அருக்கவதி
8.6
3.4
24
இக்கலூர்
4.0
1.8
25
தேவராச அர்சு வருணக்கால்வாய்
32.4
10.5
26
உதுதோரகல்லா
6.3
1.2
27
கிருட்டிணராசசாகரைப் புதுப்பித்தல்
2.0
-
28
சிறுபாசனத் திட்டங்கள்
250.6
71.3
29
குடிநீர் வழங்கல்
-
28.0

மொத்தம்
965.3
407.7

மேலும் கட்டப்படவுள்ள திட்டங்கள்
30
இலக்குமணத் தீர்த்தம்
2.8
1.5
31
கிருட்டிணராசசாகர் விரிவாக்கம்
45.5
8.2
32
செங்கவாடி
2.6
1.3
33
உலோகபவானி
3.0
2.0
34
பூரிகள்ளி ஆற்றுநீரேற்றுப் பாய்சனத்திட்டம்
2.6
1.4
35
சிறு பாய்சனத் திட்டங்கள்
-
22.0
36
மின் எடுத்தல்


37
மின்எடுத்தல் நீர்தேக்கச் சேதாரங்கள்



நீர்வள மின்நிலையங்கள்



மொத்தம்
91.2
57.3

மேற்கண்ட இரண்டும் சேர்த்து

இப்போதுள்ளதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான திட்டங்கள்
965.3
407.7

மேலும் கட்டப்பட உள்ள திட்டங்கள்
91.2
57.3

மொத்தம்
1056.5
465.0
 குறிப்பு : மேலுள்ள குறிப்புகள் அனைத்தும் கருநாடக அரசின் நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள ‘காவேரி நீர்த் தகராறு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை (பக். 40-42)
தமிழ்நாட்டில் இதுபோல் ஏதேனும் திட்டம் உண்டா என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படியே போனால் காவிரி வற்றிப் போவதைத் தடுக்க முடியுமா?
(கட்டுரை: 'முதன்மொழி' - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
கையில் வைத்து பட்டாசை தூக்கி எறிந்தபோது மகேஷின் கையிலேயே அது வெடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு மருந்துக்கு அருகே முகத்தை வைத்துக்கொண்டு பற்ற வைத்தபோது சுரேஷின் முகத்தோல் உறிந்துவிட்டது. கீதாவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமாவும் சுவாசப் பிரச்சினையும் இருந்தன. தீபாவளி நேரத்தில் அது மோசமாகிவிட்டது.
மற்றொருபுறம்...
"டமார்" என்ற மிகப் பெரிய ஓசையோடு வெடிச்சப்தம் கேட்டது. எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடமே சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. கூலிக்கு பட்டாசு செய்து கொடுக்கும் குடும்பங்களில் அதுவும் ஒன்று. நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இறந்துகிடந்தார்கள். "பட்டாசு தயாரித்தபோது விபத்து, இரண்டு பேர் சாவு" என்று அடுத்த நாள் நாளிதழில் செய்தி வந்தது. இதுபோன்ற செய்தியை, ஆண்டுக்கு 20 - 30 முறையாவது பார்க்க முடிகிறது.
சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாரி, அவளது கைகளில் உள்ள கந்தக மருந்தை எவ்வளவு தேய்த்தாலும் போவதில்லை. அவள் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. ஏனென்றால், இப்பொழுது பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடக் கூடாது என்று நெருக்கடி வந்துவிட்டது. அதனால் பட்டாசு தயாரிப்பதற்கான பொருள்களை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். வீட்டிலேயே பட்டாசு தயாரித்து கொடுத்தால் போதும், கூலி கிடைத்துவிடும்.
மாரியின் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த தங்கராசுவுக்கு  நரம்புக் கோளாறு. ஏதோ கெமிக்கல் அவரது உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று தற்போது அதிகம் சேர்ந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் மருத்துவர். இனிமேல் அவரால் பட்டாசோ, மத்தாப்போ செய்ய முடியாது. தினசரி ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.
தீபாவளி அன்று நாமும் நமது குழந்தைகளும் மகிழ்ச்சியாக வெடித்துத் தள்ளும் பட்டாசுகளைத் தயாரிக்கும்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய உதாரணம்தான் மேலே உள்ள சம்பவங்கள்.
தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்:  ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்
உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.
காதுகள் ஜாக்கிரதை
மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.
ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்
இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.
பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள்.
குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை. 
தீபாவளி என்பது வயிற்றுக்கு பாதகமில்லாத இனிப்புகள், விளக்குகள் வைத்து கொண்டாடுவதுதான். ஒரு சில நிமிடங்களில் கருகிவிடும் பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணவண்ணப் புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தரலாம்.
மேற்கண்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நன்றாக சிந்தித்துப் பார்ப்போம், பிறகு நமது குழந்தைகளுக்கும் இதைக் கூறுவோம்.  இந்தச் செய்தியை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், அலுவலக - குடியிருப்பு நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பரப்புவோம்.
பட்டாசுகளை தவிர்ப்பதற்கான கூடுதல் செயல்பாடுகள்:
- பள்ளி காலை வணக்கக் கூட்டங்களிலும், வகுப்புகளிலும் இது பற்றி பேசலாம்
- பட்டாசுகளின் மோசமான தன்மைகள் பற்றி குழந்தைகளே சிறு நாடகத்தை நடத்தலாம்
- ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளே பட்டாசுகளின் தீமைகள் பற்றி படச் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட நோட்டீஸ்களை தயாரிக்கலாம்.
- "பட்டாசுகள் வேண்டாம்", "பட்டாசுகளைத் தவிருங்கள்" என்கிற பேட்ஜ்களை விநியோகித்து மற்ற மாணவர்களிடமும் பட்டாசுகளைத் தவிர்ப்பதன் அவசியம் பற்றி பேசலாம்.
- "பட்டாசு வெடிக்கமாட்டோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கடிதங்களை குழந்தைகளே எழுதலாம். இவற்றை மற்ற வகுப்புகள், பள்ளிகளுக்கு அனுப்பலாம்.
- இது தொடர்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் உறுதிமொழி எடுக்கலாம்.

- பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம்

தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்!

தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
ஒரு புதிய மடிக்கணினி வாங்கிவிட்டோம். பழைய மேசைக்கணினியை என்ன செய்யலாம்? பிளாஸ்டிக், அலுமினியக் குப்பிகளைப்போல மறுசுழற்சிக்கு தள்ளிவிடலாமா? வீசியெறியப்பட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாகங்களையும, உலோக பாகங்களையும் ஏன் உருக்கி எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது? எலக்ட்ரானிக் சாதனங்களில் மறுசுழற்சி என்பது நாம் நினைப்பதுபோன்று அவ்வளவு எளிதாக இல்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணினி போன்ற மின்சாதனங்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே தள்ளிவிடப்படுகின்றன. இங்கெல்லாம் ஆட்கூலி குறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கெடுபிடிகள் இல்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை இருப்பதும் இந்த நாடுகளில்தான். இதன்காரணமாக மறுசுழற்சி தொழிலில் கிடைக்கும் இலாபமும் அதிகமாக இருக்கிறது. 
மறுசுழற்சி தொழிலில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதும், கட்டுபடியான விலையில் மின்னணு சாதனங்களை வாங்கமுடிவதும் நன்மைகள்.  அதே சமயம் தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எந்த பாதுகாப்புமின்றி இயங்கும் போலி தொழிற்சாலைகள் இங்கு இயங்குவதையும் கவனிக்கவேண்டும். மின்சுற்று பலகைகளில் உள்ள விலை உயர்ந்த உலோகங்களை அமிலங்களைக் கொண்டு உருக்கிப் பிரிக்கும்போது டையாக்சின், ஈயம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. செப்புக்கம்பிகளை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் மேலுறை தீயிட்டு எரிக்கப்படும்போது வெளிப்படும் டாக்சின்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற பொருட்களை உருக்கிப் பிரிக்கும் நடைமுறை இந்த நாடுகளில் இல்லை. மாறாக, மின்னணுக்கழிவுகள் பூமிக்குள் இட்டு புதைக்கப்படுகின்றன. விளைவு நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மின்னணுக் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சிறந்த வழி. ஒரு மடிக்கணினி வாங்கியவர் தன்னுடைய மேசைக்கணினியை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய கணினி உற்பத்தியாவதை ஒத்திப்போடலாம். ஒரு கணினியைத் தயாரிக்க அதன் எடையைக் காட்டிலும் 12 மடங்கு எடையுள்ள படிம எரிபொருள் தேவைப்படுகிறது.  பள்ளிகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இவற்றைப் பெற்றுவழங்கும் தன்னார்வ நிறுவனங்களும் இயங்குவது ஆறுதலான செய்தி.
தகவல்: மு.குருமூர்த்தி ( cauverynagarwest@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு!

குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

‘நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வாக்கினை மெய்பிப்பது குற்றாலம் எனலாம்.  ஆம் குற்றாலம் என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சி, கும்மாளமிட்டு ஆர்ப்பரிக்கும் அருவிகளே. இந்த அருவிகளில் குளிக்கும்போது உற்சாகம் பிறப்பதுடன் மன நிறைவும் ஏற்படுவதை அனைவரும் உணர்வர்.
குற்றாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ஏற்ற இடமன்று, இயற்கை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆன்மீகவாதிகள், நாட்டுமருத்துவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்ற தலமாக விளங்குகிறது.  பெல்ஜியத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் ‘ஸ்பா’. ‘தென்னகத்தின் ஸ்பா” என அழைக்கப்படும் சிறப்புடையது நமது குற்றாலம்.
இயற்கைவளம் பொருந்திய மேற்குதொடர்ச்சி மலையில் மூன்று சிகரங்களை கொண்ட திரிகூடமலையின் ஒரு பகுதியில் உருவாகும் ஆற்றின் பெயர் சிற்றாறு.  இந்த சிற்றாறு குற்றாலம் பகுதியில் இயற்கைபுடைசூழ பல அருவிகளாக வீழ்ந்து வளம் சேர்க்கின்றன. 
ஆர்ப்பரிக்கும் முரசு போல ஒலி எழுப்பி 200அடி உயரத்திலிருந்து விழும் பேரருவி, சிறார்களுக்கு உகந்த சிற்றருவி, புலிவாய் போன்ற பாறைப்பகுதியிலிருந்து விழும் புலியருவி, ஐந்து பாகங்களாகப் பிரிந்து விழும் ஐந்தருவி, செண்பகமரங்கள் சூழ்ந்த அடர் வனப்பகுதியில் விழும் செண்பகா அருவி, வானளாவ உயர்ந்த மரங்களில் தேனடைகள் நிறைந்த மலைகளின் உட்பகுதியில் விழும் தேனருவி, வனத்துறைக்கு உரிய பழத்தோட்டப்பகுதியில் விழும் பழத்தோட்ட அருவி, மலைஅடுக்குப் பாறைகளில் தவழ்ந்து வரும் பழைய குற்றால அருவி என குற்றாலப் பகுதிகளில் பல்வேறு அருவிகள் அழகு சேர்க்கின்றன. அதே சமயம் வளமும் சேர்க்கின்றன.
இம்மலையின் அழகினை திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் மலை வளத்தினை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியரு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவான்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கனக சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பாரிக்காலும் வழுகும்
கூனலினம் பிறை முடித்த வேணி அலங்கார்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே” 
சிங்கனும் சிங்கியும் சுற்றித்திரிந்த இம் மலையில் இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். தீராத நோய்களை எல்லாம் தீர்த்துவைக்கும் மூலிகைகளின் தாயகமாக குற்றால மலையருவிகள், உடலுக்கும், மனத்திற்கும் நலம் சேர்கின்றன.
இத்தகைய சிறப்புடைய அருவிகளின் நீரானது நிலத்தில் சிற்றாறாக உருவெடுத்து தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களை வளப்படுத்தி சீவலப்பேரியில் (முக்கூடல்) தாமிரபரணி ஆற்றுடன் இணைந்து கடலில் சங்கமமாகிறது.
இந்த சிற்றாற்றின் இடையே, தலையணை, அடிவெட்டான் பாறை, வாழ்விலாங்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பள்ளிக்கோட்டை, உக்கிரன் கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், பிராஞ்சோர், கங்கைகொண்டான் பகுதிகளில் சிறுசிறு அணைக்கட்டுகள் உள்ளன.  இதனால் சுமார் 120 குளங்கள் பயன்பெறுகின்றன.
சிற்றாற்றின் மூலமாக நேரடியாக 2074 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 120 குளங்கள் மூலம் மறைமுகமாக 7570 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதியைப் பெறுகின்றன. குற்றால அருவிகளின் நீரே இப்பகுதியின் ஜீவநீராக உயிர்நாடியாக விளங்குகின்றது.
இத்தகைய சிறப்பும், அழகும், இலக்கிய வளமும், விவசாய நலனும், மருத்துவக் குணமும் கொண்ட அருவிகள் இயற்கைச் சீரழிவை எதிர்நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற் கொள்கின்றன.
குற்றாலத்திற்கு பருவ காலத்தில் (சீஸன்) பல லட்சம் மக்கள் வருகின்றனர்.  இவர்களால் பயன்படுத்தப்படும், தூக்கி எறியப்படும் பல்வேறு கழிவுப் பொருட்கள் இயற்கை சீரழிவை ஏற்படுத்துகின்றன.  உதாரணமாக நெகிழிகள் (பிளாஸ்டிக்) காரக்கட்டிகள் (சோப் வகைகள்) மென்காரக்கூழ் (ஷாம்பூ) கழிவுப் பொருட்கள் போன்றன மூலிகை வளம் பொருந்திய இயற்கையைச் சீரழிக்கின்றன.
மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருட்களின் கலவையில் (சோப், ஷாம்பூ) கார்சினோஜென்ஸ் எனப்படும் சோடியம் லாரல்சல்பேட், சோடியம் எத்தில் லாரல் சல்பேட் உள்ளிட்ட இரசாயன வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.  இதில் கார்சினோஜென்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் ஊக்கியாகும்.  இந்த வகையான இராசயணப் பொருள் அதிக நுரைவருவதற்காக சேர்க்கப்படுகிறது.  இது அனுமதிக்கப்பட்ட சதவீதம் 6 % மட்டுமே.  ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இதனை 15% வரை சேர்க்கின்றன.  இத்தகைய வேதிப்பொருட்கள் சதவீதம் 1% அதிகமானால் கூட அது பெருந்தீங்கினை விளைவிக்கும், பல மேலை நாடுகளின் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனியார் மற்றும் உலக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கடைவிரித்து விற்பனை செய்யும் சந்தைகளாகவும், கழிவுகளை கொட்டும் குப்பைப் பகுதிகளாகவும் கருதுவதால் தடைவிதித்தல் என்பதும், சட்டங்கள் என்பதும் காகித அளவிலேயே நின்று விடுகின்றன.  இதற்கு நமது மத்திய, மாநில அரசுகளும் துணை நிற்பது துர்  பாக்கியமே.
அருவிகளில் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் கார்சினோஜென்கள் (சோப், ஷாம்பூ) நீரில் கலக்கும் போது அந்நீர் அதிகமான காரத் தன்மை உடையதாக மாறுகின்றது.  இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள், சிறு உயிரினங்கள் மற்றும் அதனுடைய முட்டைகள் அழிக்கப்படுகிறன்றன.  எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதால் இந்நீர் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.
சிற்றாற்றால் பயனடையும் சுமார் 9,000 ஹெக்டேர்  நிலங்களும் உப்பு மற்றும் காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. அதுமட்டுமின்றி இந்நீரைப்  பருகினாலோ, அல்லது இந்நீரின் மூலம் விளைவிக்கப்படுகின்ற பொருட்களை உண்பதாலோ புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் இப்பகுதி மக்களைத் தாக்குகின்றன.
இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை ஏற்கனவே தனியார்  நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  குப்பைக் கழிவுகள் ஆற்றின் கரைகளில் குவிக்கப்படுகின்றன.  நீர் வழிந்தோடும் கால்வாய்களும் தூர் வாரப்படாமல் பராமரிப்பு இன்றி அமலைச் செடிகளால் நீக்கமற நிறைந்துள்ளன.
இச்சூழலில் அருவிநீர் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், அனைத்துப் பாதிப்புகளும் இப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகின்றன.
அரசாங்கம் குற்றால அருவிகளில் இரசாயன வேதிப் பொருட்களைப் பயன்படுத்த உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.  குறிஞ்சி மண்ணையும் மக்களையும் இயற்கையோடு ஒத்துவாழ வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாகிறது. 
(பூவுலகு மே 2010 இதழில் வெளியானது)