Monday, 28 November 2011

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்!


திருச்சி
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்

First Published : 27 Nov 2011 01:25:26 PM IST


திருச்சி, நவ. 26: அணு உலைகளுடன் ஒப்பிடும்போது ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம் என்றார் எழுத்தாளர் ஞாநி.  திருச்சி களம் அமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் "அணு அரசியல்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:  "கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோர் இத்தனை நாள் எங்கே போனார்கள் என்கிறார்கள். 1987-90-களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது.   1990-களில் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 10 ஆண்டுகள் கூடங்குளம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, 2001-ல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டமும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.   சிந்திக்கக்கூடிய மக்கள் கூடங்குளம் அணு உலையை மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் எனக் கேட்க வேண்டும். "செர்னோபில்' விபத்து ஒரு கண்டத்தையே பாதித்தது என்ற வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.  கூடங்குளம் அணு உலை வந்தால் மின்சாரத் தட்டுப்பாடு போய்விடும் என்பது வடிகட்டின பொய். 1962 முதல் இவர்கள் கூறிவந்த அளவுக்கு இதுவரையிலும் மின்சாரம் கிடைக்கவில்லை. கொடுத்த இலக்கில் ஒரு சதத்தைக்கூட அணு உலைகள் நிறைவு செய்யவில்லை. 1999-ல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரியே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.  இதுவரை அணுசக்தி குறித்த மக்களின் எந்தக் கேள்விக்கும் சம்பந்தப்பட்ட துறை பதிலளித்ததே இல்லை. இதுதொடர்பாக பேசுவதே குற்றம் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. முதல்முறையாக கூடங்குளத்தில் மக்களின் அசராத போராட்டத்துக்குப் பிறகு பதில் என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.  அணு உலையை இயக்க ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் வேண்டும். பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்க முடியுமா? இந்த அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், பாதிக்கும் அதிகம் வண்டல் மண்தான் நிரம்பியிருக்கிறது. போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டாலும், உலையைக் குளிர்விக்க முடியாமல் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டை பேரழிவாகக் கருதுகிறோம். தற்போது அமைக்கப்படும் அணு உலைகளோடு ஒப்பிடும்போது, அங்கு போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்.  அணுசக்தியால் ஏற்படும் விபத்துகளுக்கு அரசு நிறுவனம் உள்பட எந்தக் காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடு- இழப்பீடு வழங்குவதில்லை. கூர்ந்து கவனித்தால் இது புரியும்.  இப்போது அரசு இந்த அணுஉலைகளை நடத்தி, ஒரு கட்டத்தில் தனியாருக்கு அளிப்பதுதான் திட்டம். இப்போது மூடிவிட்டால் தனியாருக்குக் கொடுக்க முடியாது என்பதே மத்திய அரசின் கவலை.  குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதும் தவறான கருத்து. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 16 முதல் ரூ. 20 வரைக்கும் விலையாக நிர்ணயம் செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே வெயிலைப் பார்க்கும் ஜெர்மன் நாட்டின் மொத்த மின்சக்தியில் 20 சதம் சூரிய ஒளியில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 300 நாள்கள் மேகங்கள் இல்லாத நாள்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  தாவரங்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறிய சிறிய ஏற்பாடுகளை கிராமங்களில் செயல்படுத்தலாம். இதற்கான முன்னுதாரணங்கள் நிறைய இருக்கின்றன. மின்சாரத்துக்காக குண்டு சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஞாநி.  கூட்டத்துக்கு, பா. சந்திரகாந்த் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா அறிமுகவுரை நிகழ்த்தினார். இரா. சுவாமிநாதன் வரவேற்றார்.   சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் எழுத்தாளர் மெய். சேது ராமலிங்கம் எழுதிய "பேரழிவுக்கான அணு சக்தி ஒப்பந்தங்கள்' என்ற நூலை ஞாநி வெளியிட, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர், அமைப்பாளர் அ. கிரகோரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தைத் தாக்கவிருக்கும் வஜோண்ட் பேரழிவு!

தமிழகத்தைத் தாக்கவிருக்கும் வஜோண்ட் பேரழிவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 10
குறைந்தஅதி சிறந்த 
திருமதி சோனியா காந்தி அவர்கள் பிறந்த ஊரான (இத்தாலியின்) லூசியானா நகருக்கு வட கிழக்கே 78 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லாங்கேரோன் (Longarone) கிராமத்தில் 1959 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட வஜோண்ட் அணைக்கட்டின் (Vajont Dam) வரலாற்றை நினைவு கூற வேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டு உள்ளோம். வஜோண்ட் அணைக்கட்டு நிர்வாகமானது அணைக்கட்டு அமைவிடத்தின் நிலவியல் மற்றும் பொறியியல் உண்மைகளை உதாசீனப்படுத்தியது. அதன் அசிரத்தைப் போக்கை இத்தாலி அரசு கண்டிக்கவில்லை; மாறாக ஊக்குவித்தது. இந்த கூட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவின் நினைவுச் சின்னமே வஜோண்ட் அணைத் திட்டம். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் இன்று வஜோண்ட் அணையின் வரலாற்றை நினைவுபடுத்துவதாக உள்ளன. 
மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் 70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள் என்று அவற்றிற்கு நிலவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளார்கள். 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் அவற்றை முதன் முதலில் கண்டறிந்தார்கள். அவற்றின் கட்டமைப்பை விரிவான ஆய்வுக்குட்படுத்தி அறிவியல் உலகத்திடம் பகிர்ந்துகொண்டார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலை முகவாய்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நில அதிர்வுகளின்போதும், புயல் போன்ற நிகழ்வுகளின் போதும் வண்டல் குவியல்கள் நிலைகுலைந்து போகும் தன்மை பெற்றவை. நிலைகுலைந்த வண்டல் குவியல்களால் கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகள் மெகா சுனாமிகளை (100 மீட்டருக்கும் கூடுதலான உயரம் கொண்ட சுனாமி அலைகளை) உருவாக்க வல்லவை என்பது அறிவியல் உலகம் அறிந்த உண்மை. இந்த வண்டல் குவியல்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 90 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன.
vajont_dam_620
வாஜோண்ட் அணைக்கட்டின் அமைவிடத்தின்  நிலவியல் உண்மைகளை உதாசீனம் செய்த SADE நிறுவனத்தைப் போலவே இந்திய அணுசக்திக் கழகமும் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிழிவு நிகழ்வுக்கான சாத்தியப்பாட்டை ஆய்வுக்குட்படுத்த இன்றளவும் மறுத்து வருகிறது.  இந்த சூழ்நிலையில், வஜோண்ட் அணைக்கட்டின் வரலாற்றைப் படிக்கும்போது எப்படிப்பட்ட நிலவியல் பேரிடரையும், சமூக விளைவுகளையும் நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
................
வஜோண்ட் அணைக்கட்டானது உலகத்தின் மிக உயர்ந்த அணைக்கட்டுகளில் ஒன்றாகும். அதன் உயரம் 262 மீட்டர். வடக்கு இத்தாலியில் உள்ள மாண்டெ டாக் (Monte Toc) மலை அடிவாரத்தில் இந்த அணை எழுப்பப்பட்டது.
1925-28 ஆம் ஆண்டுகளில் முசோலினி அரசின் நிதி அமைச்சராக இருந்த குயுசெப் வால்ப்பி (Gueseppe Volpi)-க்கு சொந்தமான ஆட்ரியாடிக் மின்சாரக் குழுமத்தினால் (Societa Adriatica di Elettricita – SADE) கட்டப்பட்டதே இந்த அணை. நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் கட்டப்பட்ட்ட இந்த அணையை அந்தப்பகுதியின் அனைத்து கிராம-நகர மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நிலவியல் ஆய்வுகளையும் முழுமையாக செய்தாகிவிட்டதாக SADE அறிவித்தது. எதிர்பாராத விதமாக, 1959 ஆம் ஆண்டில் மாண்டெ டாக் மலையை ஒட்டி சாலைகளை அமைத்தபோது நிலமானது பல இடங்களில் பிளந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை ஒட்டி எழுந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்ள SADE நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய ஆய்வுகள் பல அதிர்ச்சிமிக்க முடிவுகளை முன்வைத்தன.
vajont_dam_tragedyஅணையின் தென்புற நீர்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியிருக்கும் மாண்டெ டாக் மலைப்பகுதியானது உறுதியற்ற நிலவியல் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றும், அணையில் நீரை நிரப்பினால் இந்த மலைப்பகுதி முழுவதுமே நிலச்சரிவுக்குள்ளாகும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையை SADE நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 1960 ஆம் ஆண்டில் அணையை நிரப்புவதற்கான அனுமதியை இத்தாலி அரசு வழங்கியது. அணை நிரப்பப்பட்ட சில மாதங்களிலேயே சிறிய அளவிலான நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் உருவாகத் தொடங்கின. இந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களின் மீது “சமூக ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாக” இத்தாலி அரசு குற்றம் சாட்டியது; அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்தது.
அந்த ஆண்டு இறுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு, நிலச்சரிவின் இடிபாடுகள் அணைக்குள் வீழ்ந்தன. இதன் பிறகு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடிவு செய்த SADE, கூடுதலாக நிலச்சரிவில் இருந்து அணையைக் காப்பாற்ற மலையை ஒட்டி தடுப்புச்சுவர் ஒன்றைக் கட்ட முடிவு செய்தது. 1961 ஆம் ஆண்டின் இறுதியில் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. இதன் பிறகு அணையில் மீண்டும் நீர் நிரப்பப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணையின் முக்கால் பாகம் நிரப்பப்பட்டபோது ஐந்து பூகம்பங்கள் ஏற்பட்டன. மக்கள் மீண்டும் போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பை SADE கண்டுகொள்ளவில்லை. மக்களின் எதிர்ப்பையும் மீறி அணையை முழுஅளவில் நிரப்பிக்கொள்ள இத்தாலி அரசின் அனுமதியைப் பெற்றது.
தண்ணீரை முழு அளவில் தேக்கினால் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவு குறித்து SADE நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டனர். மிக‌ப்பெரிய நிலச்சரிவுக்கான சாத்தியம் இருப்பதாக அவர்களது ஆய்வுகள் கூறின. நிர்வாகத்தைப் பொறியியலாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையையும் நிர்வாகம் உதாசீனப்படுத்தியது.
அணைக்கு எதிரான போராட்டம் வலுப்படுவதை உணர்ந்துகொண்ட நிர்வாகம் வஞ்சக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது. SADE நிறுவனத்தை இத்தாலி அரசே ஏற்று நடத்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தது. நிறுவனத்தை அரசு ஏற்றுக்கொண்ட பின்னரும் கூட, அதன் தலைமை நிர்வாகிகளாக SADE -இன் பழைய முதலாளிகளே இருக்க வேண்டும் என்று இத்தாலி அரசை SADE கேட்டுக் கொண்டது. அந்த விருப்பத்தை இத்தாலி அரசு நிறைவேற்றவும் செய்தது.
1963 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனமாக மாறிப்போன SADE, அணையை மீண்டும் முழுமையாக நிரப்ப முடிவு செய்தது. ஜூலை மாதம் அணையில் நீர் முழுமையாக நிரப்பப்பட்டது. அப்போது கடந்த காலத்தைப் போலவே நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் மீண்டும் உருவாகத் தொடங்கின. செப்டம்பர் 13 ஆம் தேதியன்று மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதும் மெல்லச் சரியத் தொடங்கியது. செப்டம்பர் 26 ஆம் தேதி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க நிர்வாகம் முடிவு செய்தது. நீர்மட்டத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும்போதே மலைப்பகுதி மேலும் அதிகமாக சரியத் தொடங்கியிருந்தது. நிகழப்போகும் பேரிடர் குறித்து பகுதி மக்களிடம் எச்சரிக்க எவ்வித முயற்சியையும் அணைக்கட்டு நிர்வாகம் எடுக்கவில்லை.
1963 அக்டோபர் 9 ஆம் தேதி மாலை நேரம் அந்தப்பகுதியில் கடுமையான மழை பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு 10.39 மணிக்கு மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதுமே அணைக்குள் சரிந்து விழுந்தது!
பேரிடர்க்குள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்மலையின் இடிபாடுகள் அணையின் நீருக்குள் விழுந்ததால் அணையில் இருந்த சுமார் 5000 கோடி லிட்டர் தண்ணீரானது 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு மேலெழும்பியது. 262 மீட்டர் அணை உயரத்தையும் தாண்டி அது சுற்றியிருந்த பகுதிக்குள் பாய்ந்தது.
லாங்கரோன், பிராகோ, ரிவால்டா, வில்லனோவா, பே ஆகிய கிராமங்களை அது தரைமட்டமாக்கியது. சுமார் 2000 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகே வஜோண்ட் அணைக்கட்டுத் திட்டம் ஒருவழியாகக் கைவிடப்பட்டது.
எவராலும் எதிர்பார்க்க முடியாத இயற்கை செயல்பாடுதான் இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இத்தாலி அரசு அறிவித்தது. ஊடகங்களில் இது குறித்து வாதி-பிரதிவாதி சண்டைகள் நடந்தன. இது கடவுளின் செயல் என்று பல பத்திரிகைகள் எழுதின. இது எதிர்பாராத இயற்கை நிகழ்வுதான் என்று பிரதம மந்திரி ஜியோவான்னி லியோன் சத்தியம் செய்தார். ஆனால் அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப் போனார். தோல்வி அடைந்த மறுநாளே அவர் மக்களின் படுகொலைக்குக் காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்ட SADE நிறுவனத்தின் மூத்த வக்கீலாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
SADE -க்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் மக்களால் நெருங்கமுடியாத மலை நகரமான L'Aquila – வில் நடத்தி முடிக்கப்பட்டது. SADE நிறுவனத்தின் அதிகாரிகள் வெகு சிலருக்கே தண்டனை அளிக்கப்பட்டது. மிகவும் குறைவான தண்டனையை அவர்களுக்கு வழங்கி விசாரணையை நீதிமன்றம் முடித்துக் கொண்டது. SADE நிறுவனத்திற்கு எதிராக எவ்வித நவடிக்கையையும் எடுக்க முடியாது என்று இத்தாலி அரசாங்கம் திட்டவட்டமாகக் அறிவித்தது. ஆனால், மனசாட்சியின் உறுத்தலால் பாதிக்கப்பட்ட SADE நிறுவனத்தின் பொறியியாளரான மரியோ பேன்சினி ஐந்தாண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பொறியியல் மற்றும் நிலவியல் அசிரத்தையால் மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட உலகின் மிகப் பெரிய ஐந்து பேரிடர் நிகழ்வுகளில் ஒன்றாக 2008 ஆம் ஆண்டில் வஜோண்ட் பேரழிவை யுனெஸ்கோ அறிவித்தது.
இந்திய அணுசக்திக் கழகமானது கூடங்குளம் அமைவிடத்தின் நிலவியல் மற்றும் கடலியல் உண்மைகளை அறிந்துகொள்ளத் தேவைப்படும் எவ்வித முயற்சியையும் இன்றளவும் எடுக்க மறுத்து வருகிறது. அதன் போக்கைக் கண்டிக்க வேண்டிய அணு சக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தை அது விலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது. மத்திய அரசும் இந்த செயல்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வஜோண்ட் பேரழிவு உருவாவதற்கான அனைத்து வாய்ப்பும் உருவாகியுள்ளது. 
இதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?
- ரா.ரமேஷ் ( cypherandone@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

அனைத்து அணு உலைகளும் மனிதகுலத்திற்கு ஆபத்தானவைகளே!

அனைத்து அணு உலைகளும் மனிதகுலத்திற்கு ஆபத்தானவைகளே!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
கூடவே கூடாது கூடங்குளம் அணுமின் நிலையம்
ஏசு கிறித்து பிறந்த ஆண்டை மய்யப் புள்ளியாகக் கொண்டு, வரலாற்றில், ஆண்டுகள், கி.மு., கி.பி. என்று குறிக்கப்படுகின்றன. ஏசு கிறித்து பிறந்த போது உலகின் மக்கள் தொகை 10 கோடியாக இருந்தது. கி.பி.1804இல்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால் அடுத்த 123 ஆண்டு களுக்குள் - 1927இல் 200 கோடியாக உயர்ந்தது. அடுத்த 32 ஆண்டுகளில் - 1959இல் 300 கோடி யானது. 2011 அக்டோபர் 31 அன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்று அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மக்கள் தொகை நிதியம் அறி வித்துள்ளது.
1800க்குப்பின் மக்கள் தொகை கிடுகிடுவென்று உயர்ந்ததற்கு, எரிசக்தியைக் கொண்டு இயந்திரங்கள் மூலமாக நடைபெற்ற முதலாளிய உற்பத்தி முறை யின் வளர்ச்சியே பெரிய காரணமாகும். இயற்கை யின் மூலவளங்களைக் கொள்ளையடிக்கவும், உழைக்கும் மக்களின் குருதியை அட்டைகள் போல் உறிஞ்சவும் முதலாளிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத் தை மேலும் மேலும் அதிகமாக்க வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், மேம்பட்ட தொழில்நுட்பங்களும் உருவாயின. நோய்களைத் தடுக்கும் - குணப்படுத் தும் புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பின்னணிகளில்தான் தாமசு ஆல்வா எடிசன் 1879இல் கார்பன் இழை கொண்ட மின்சாரக் குமிழ் விளக்கைக் (குண்டு பல்பு) கண்டுபிடித்தார். 1900க்குப் பிறகுதான் எடிசன், இன்றும் பயன்பாட்டில் உள்ள டங்ஸ்டன் இழைகொண்ட மின்சாரக் குமிழ் விளக்கைக் கண்டுபிடித்தார். முதலாளிய உற்பத்தியில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார் எடிசன். எனவே இவர் ‘மின்தந்தை’ என்று போற்றப்படுகிறார். 400க்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்பங்களை இவர் உருவாக்கினார். அவற்றுக்கெல்லாம் காப்புரிமை பெற்று, பெரும் செல்வத்தைக் குவித்தார். முதலாளிய உலகில் முதல் பெரும் பணக்கார அறிவியல் அறிஞர் எடிசனே ஆவார்.
தொழில்கள், வணிகம், வேளாண்மை, அலுவல கங்கள், வீடுகள், வீதிகள் என எல்லாவற்றுக்கும் மின்சாரம் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எனவே தான் மின்சாரம் + கூட்டுறவு = சோசலிசம் என்றார் லெனின். (Electricity plus co-operations is equal to socialism) உற்பத்தியின் பயனில் - நுகர்வில் அனைவருக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதே சோசலிசத்தின் கோட்பாடாகும். அதனால் தான் கியூபாவில் மின்சார உற்பத்தி, தேவையான அளவை எட்டியபிறகு - சில ஆண்டுகளுக்கு முன் தான், வீடுகளில் மின்சார அடுப்பைப் பயன்படுத்து வதற்கான தடை நீக்கப்பட்டது.
ஆனால், முதலாளித்துவ உற்பத்தி முறை உள்ள நாடுகளிலெல்லாம், உற்பத்தியின் பயன்களில் பெரும் பகுதியைப் பெரும் உடைமை உடைய வர்க்கமா கவும், பணக்காரர்களாகவும் இருப்பவர்களே துய்க் கின்றனர். கல்வி, மருத்துவம், வீடு, பிற வாழ்க்கை வசதிகள் முதலானவற்றிலும் இதே நிலைதான்.
தமிழ்நாட்டில் 2.25 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 4.1% மின் இணைப்பு பெற்றுள்ள உயர் அழுத்த மின்சாரம் பெறும் தொழிலகங்கள் 31% மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 3% மின் இணைப்பு உடைய குறைந்த அழுத்த மின்சாரம் பெறும் தொழிலகங்கள் 10% மின்சாரத்தை நுகர் கின்றன. மின் இணைப்பில் 65% கொண்டுள்ள வீடு களுக்கு 23% மின்சாரம் செலவாகிறது. 11% மின் இணைப்பு கொண்ட வேளாண்மைக்கு 27% மின் சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய அளவில் வேளாண்மைக்கு 17% மின்சாரம் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 11,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8,500 மெகாவாட் அளவுக்கே கிடைக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலுக்குமுன், தி.மு.க. ஆட்சியில் இருந்ததைவிட அதிக நேரம் இப்போது மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் “ஆந்திராவில் இராமகுண்டம் அனல் மின்நிலையம், சிம்மாத்ரி அனல் மின் நிலையம், ஒரிசா மாநிலத்தில் தால்சரா அனல் மின்நிலையம், கர்நாடகாவில் கைகா அனல் மின்நிலையம் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்து விட்டது. அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி அனல் மின்நிலையம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. எனவே வெளிச்சந்தையில் மின்சாரத்தை மேலும் கூடுதலாக வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டுள் ளார். அண்மைக் காலமாகத் தனியார் துறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
2012ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அடியோடு நீங்கிவிடும் என்று முதலமைச்சர் சொல்கிறார். 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 5 தனியார் அனல் மின் நிலையங்களை நிறுவ தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தனியார் மின் உற்பத்தி 1400 மெகாவாட்டாக உள்ளது. தற்சமயம் தமிழக மின் வாரியம், தூத்துக்குடி 1000 மெகாவாட், மேட்டூர் 500 மெகாவாட், எர்ணாவூர் 600 மெகாவாட், உடன்குடி (தூத்துக்குடி) 1600 மெகாவாட் திறன்கொண்ட மின் நிலையங்களை நிறுவி வருகிறது. இவை அனைத் தும் உற்பத்தியைத் தொடங்கியதும் மின்பற்றாக்குறை இருக்காது என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கு இவையெல்லாம் அவ்வாறு நிகழ்வதில்லை என்பது அனுபவ உண்மையாகும். ஏனெனில், இந்திய அளவில் 8ஆவது, 9ஆவது, 10ஆவது அய்ந்தாண்டுத் திட்டக்காலங்களில் கூடுதலான மின் உற்பத்தி என்பது முறையே, 30,538, 40,425, 41,110 மெகாவாட்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உண்மையான கூடுதல் மின் உற்பத்தி முறையே 16,730, 19,119, 27,000 மெகா வாட் என்ற அளவிலேயே இருந்தது.
ஏனெனில் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ப மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசும், மாநில அரசு களும் போதிய அக்கறை காட்டவில்லை.
இந்தியத் தொழில்கள் மற்றும் வணிகக் கூட்டமைப்பின் (அசோசாம்) பொதுச் செயலாளர் டி.எஸ். ரவத் 10.10.2011 அன்று தில்லியில், “நம் நாட்டில் நிலக்கரி மூலம் 52.4%, எண்ணெய் மூலம் 31.7%, இயற்கை எரிவாயு மூலம் 10% என மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை நீடிக்கிறது. ஆனால் நிலக்கரிப் படிவங்கள் அடர்ந்த காடுகளில் உள்ளன. அவற்றை வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏற்படுகிறது. நீர்மின் திட்டங்களால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சூரிய சக்தி மின்திட்டம் அதிகச் செலவா னதாக இருக்கிறது. இந்தியாவில் இன்று 40% வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. எனவே அணு மின் சக்தி தான் ஒரே தீர்வு” என்று கருத்துரைத்துள்ளார்.
ஏழைகளின் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லையே என்று முதலாளிகளின் சங்கம் கூறுவதானது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போன்ற தேயாகும்.
இந்தியாவில் 24 கோடி குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 9 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு இல்லை. கிராமப்புறங்களில் 58% வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. தமிழ்நாட்டில் 2001 மக்கள் தொகைக் கணக்கின்படி 15% வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இந்திய அளவில் மொத்தம் உள்ள 6,38,000 கிராமங்களில், 1,12,000 கிராமங்களுக்கு மின்வசதி இல்லை. வேளாண்மைக்கு நிலத்தடியிலிருந்து நீரை எடுக்க, 60 விழுக்காட்டிற்கு டீசல் என்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன.
“உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது; நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை” என்று காந்தியடிகள் கூறியதாக ஆளும் வர்க்கம் கூறிக் கொண்டி ருந்தது. கடந்த 25 ஆண்டுகளாகத் தாராளமயம் - தனியார்மயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதால், ஆளும்வர்க்கம் கூறும் உண்மையான இந்தியா நகரங்களுக்குக் குடியேறிவிட்டது. வேளாண் மை சீரழிந்துவிட்டது.
2020க்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 10 விழுக்காட்டுக்குமேல் உயர்த்தி, இந்தியாவை உலக வல்லரசாக்கிட வேண்டுமென்று நாள்தோறும் ஆட்சி யாளர்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற் காக இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம், நிலம், சாலை வசதி, நீர், வரிச்சலுகைகள் முதலானவற்றை அளிப்பது தங்களின் தலையாயக் கடமை எனக் கருதி நடுவண் அரசும், மாநில அரசுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே அணு மின் உற்பத்தியைப் பெருக்க வேண் டும் என்று இவர்கள் கூறுவதெல்லாம், கிராமங்களில் இருண்டு கிடக்கும் 58% வீடுகளில் ஒளி ஏற்றுவதற் கோ, அல்லது இன்னும் கிட்டத்தட்ட நிலவுடைமைச் சமுதாயக் காலத்தின் கொடிய வாழ்நிலையில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற் கோ அல்ல. பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக் காக, இந்தியப் பெருமுதலாளிகளின் தொழில்-வணிக வளர்ச்சிக்காக, பல தலைமுறைகளுக்கும் பல இலட் சம் மக்களின் உயிர்களைக் காவு கொள்ளும் ஆபத் துகள் நிறைந்த அணு மின்நிலையங்களை அமைத் திட ஆளும் வர்க்கம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது.
இந்திராகாந்தி, இந்தியாவை அணுஆயுத வல்லர சாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 1974 மே மாதம் இராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில், இந்தியாவின் முதலாவது அணுசக்தி வெடிப்புச் சோதனையைக் கமுக்கமாக நிகழ்த்தினார். அதனால்-அமெரிக்காவும் கனடாவும் வழங்கிவந்த அணுசக்தி உற்பத்திக்கான மூலப் பொருள்களை வழங்குவதை நிறுத்திவிட்டன. 1998இல் மே மாதம் வாஜ்பாய், ‘அகண்ட பாரதக் கனவுடன்’ பொக்ரானில் இரண்டாவது அணுவெடிப்புச் சோதனையை நடத்தி னார். அணுசக்திக்கான பொருள்களை வழங்கும் நாடுகள் ((Nuclear Suppliers Group - NSG) இந்தியாவுக்கு அணுசக்திக்கான எரிபொருள்களையோ, அணுஉலை களையோ, தொழில்நுட்பத்தையோ வழங் கக்கூடாது என அமெரிக்கா ஆணையிட்டது. அமெரிக் காவின் முன் முயற்சியால் 1992இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 46 நாடுகள் உள்ளன.
ஆயினும், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங் களின் நலன்களைப் பேணவும், வேகமாக வளர்ந்து வரும் சீனாவுக்கு ஓர் அச்சுறுத்தலாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளவும், தன் அரசியல், இராணுவ ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் இந்தியாவை இளைய கூட்டாளியாக (ஏவலாளாக) ஆக்கிக் கொள்ளவும் 2005 சூலை 18 அன்று வாஷிங்டனில், அதிபர் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். 2006ஆம் ஆண்டு மார்ச்சு 3 அன்று தில்லியில் புஷ்ஷும் மன்மோகன் சிங்கும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.
இதற்காக, அயல் உறவுக் கொள்கை, இராணுவம், வேளாண்மை, உயர் தொழில்நுட்பம் முதலான வற்றில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அணுசக்திப் பொருள்கள் வழங்கும் நாடுகள், பன்னாட்டு அணுசக்தி முகமை (International Atomic Energy Agency-IAEA) ஆகியவை இந்தியா வுக்கு விதித்திருந்த தடைகளை நீக்கும் வகையில் 2008இல், புஷ் அரசு அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புத லைப் பெற்றது. ஆனால் மன்மோகன் இந்த ஒப்பந்தத் தை நாடாளுமன்றத்தின் முன்வைக்காமலேயே இதில் கையெழுத்திட்டார். குரங்காட்டி, குரங்கை ஆட்டுவிப் பதுபோல அமெரிக்காவின் ஆட்டுவிப்புகளுக்கு ஏற்ப இந்தியா ஆடாவிட்டால், அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய தனக்குள்ள அதிகாரத் தை அமெரிக்கா ஏவும். அந்நிலையில் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள் அப்படியே முடங்கிப் போகும்.
அமெரிக்காவின் ஆணையின்படி, இந்தியா, 2010 இல் அணுசக்தி விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளது. இதன்படி அணுஉலைகளை, எரி பொருளை, தொழில்நுட்பத்தை - தயாரிக்கின்ற அல்லது வழங்குகின்ற பன்னாட்டு நிதி நிறுவனம், இந்தியாவில் நிறுவப்படும் அணு உலையில் ஏற்படும் விபத்துக்கோ, அதனால் அளிக்கப்பட வேண்டிய இழப் பீட்டுக்கோ எவ்வகையிலும் பொறுப்பு ஏற்க வேண்டிய தில்லை. போபால் நச்சுவாயுக் கசிவின் பாதிப்புக்கான இழப்பீட்டிற்காகவும் குற்றச் செயலுக்காகவும் அமெரிக் காவில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததுபோல் இனி செய்ய முடியாது. அணுஉலைகளை - எரிபொருளை வழங்கும் அயல் நாட்டு நிறுவனத்தை அணு விபத்துக்கு எவ்வகை யிலும் பொறுப்பாக்கிட முடியாது. அதனால் அந்நிறுவ னங்கள் தரமான, பாதுகாப்பான உலைகளை வடி வமைக்க வேண்டும், எரிபொருளைத் தயாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் போகிறது.
மேலும் அணு விபத்தால் பாதிக்கப்படுவோர் இழப் பீடு கோரி, இந்திய நீதிமன்றங்களில்கூட குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்கைத் தொடுக்க முடியாது. இந்திய அரசு அமைக்கும் அணுவிபத்து இழப்பீடு ஆணையத்திடம்தான் பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்ய வேண்டுமாம். அணுஉலையை இயக்கும் பொறுப்பில் உள்ள இந்திய அணுசக்தி மின்கழகம் தான், அணுவிபத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் இழப்பீடு தொகை ரூ.2785 கோடி என வரம்பிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணுமின் கழகம் ரூ.500 கோடி அளிக்கும். மீதியை நடுவண் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து அளிக்கும், பல தலை முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய, அணுவிபத் துக் காரணமாக இருக்கக் கூடிய பன்னாட்டு நிறுவனங் களைத் தப்பவிட்டுவிட்டு, பிச்சைக்காசு போல் இழப்பீடு தொகையைப் பெற இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இந்தப் பின்னணியில்தான் கூடங்குளத்தில் மேலும் 1000 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட 4 அணுமின் உலைகளை அமைக்க இரஷ்யாவின் ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்போர்ட் (Atom Story Export) நிறுவனம் முன்வந்துமுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும், சப்பானின் ஹிட்டாச்சி நிறுவனமும் இணைந்து ஆந்திரத்தில் கோவாடாவில் 6 அணுஉலைகள், அமெரிக்காவின் வெஸ்டிஸ் ஹவுஸ் நிறுவனம் குசராத்தில் மத்திவிரிடியில் 6 உணுஉலைகள், பிரான்சின் அரேவா மகாராட்டிரத்தில் ஜெய்தாபூரில் 6 அணுஉலைகள், இரஷ்ய நிறுவனம் மேற்கு வங்கத்தில் ஹிராப்பூரில் 4 அணுஉலைகள் என அமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய அணுமின் கழகத்துக்கும் முறையான ஒப்பந் தம் ஏற்படுவதற்கு முன்பே இந்த அணுஉலைகளை அமைப்பதற்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது.
இந்நிலையில் சப்பானில் 2011 மார்ச்சு 11 அன்று, ரெக்டர் அளவுகோலின்படி 9 புள்ளி அளவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின் விளைவாக 27 அடி உயரத்திற்கு எழும்பிய ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியதில் புகுஷிமாவில் இருந்த மூன்று அணுஉலைகளில் குளி ரூட்டிச் சாதனங்கள் செயல் இழந்தன. அணுஉலை கள் ஒரு குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் அணுக் கள் பிளவுண்டு பெரும் வெப்ப ஆற்றலை வெளியிடு கின்றன. இதுவே மின்சாரமாக மாற்றப்படுகிறது. அணுஉலைகளை ஒரே சீரான வெப்ப நிலையில் வைத்திருக்கும் தன்மையில் நீர் சுழற்சி மூலம் அவை குளிர்விக்கப்பட வேண்டும். இக்குளிர்விக்கும் முறை நிறுத்தப்பட்டால், யுரேனியம் உருகி கதிர்வீச்சு ஏற்படும். புகுஷிமாவில் ஏற்பட்ட கதிர்வீச்சு, பலநூறு கிலோ மீட்டர் பரப்பிற்குப் பரவியுள்ளது.
1945 ஆகசுட்டு மாதம் சப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பின் விளைவின் கொடுமைகளையும் நினைத்தாலே எவர் நெஞ்சும் நடுங்கும்.
1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவுகள் எனும் இடத்தில் உலகின் முதலாவது அணுமின் நிலைய விபத்து நடந்தது. இதில் ஒருவரும் உயிரிழக்க வில்லை. ஆனால் அமெரிக்கா அதன்பின் புதிய அணுமின் நிலையத்தை அமைக்கவில்லை. பாதிக்கப் பட்ட அணுஉலைகளிலிருந்து யுரேனியத்தைப் பிரித் தெடுக்க 14 ஆண்டுகளாயிற்று. பெருந்தொகை இதற் காகச் செலவிடப்பட்டது.
1986ல் சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணுஉலை வெடிப்பு ஏற்பட்டது. 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர்வீச் சால் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். 3.5 இலட்சம் மக்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இப்போது 2011 மார்ச்சு மாதம் சப்பானில், புகுஷிமாவில் அணுஉலை வெடித்துள்ளது.
புகுஷிமா அணுஉலை விபத்து, அணுசக்தி ஆதரவாளர்களையே கூட அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன. சப்பானில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30% அணுசக்தியிலிருந்து கிடைக்கிறது. அணுமின் நுகர் வில் சப்பான் உலகில் இரண்டாவது இடத்தில் இருக் கிறது. இதில் முதலிடத்தில் உள்ள பிரான்சில், மொத்த மின் உற்பத்தியில் 75% அணுசக்தி மின்சாரமாகும். ஆனால் உலக அளவில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 7% மட்டுமே அணுமின்சாரமாகும்.
இந்தியாவில் தற்போது 20 அணுமின் உலைகள் உள்ளன. இவற்றுள் 19 உலைகள் மட்டுமே செயல் படுகின்றன. இவற்றிலிருந்து 4,680 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் இது 3% ஆகும். இனி கூடங்குளம் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அணுஉலைகள் அனைத்தும் இயங்கத் தொடங்கிய பிறகும், அணுமின்சாரத்தின் பங்கு 10%க்குமேல் போகாது என்று இந்திய அணுமின் கழகமே சொல்கிறது. அமெரிக்காவுக்கு அடிமைமுறி எழுதிக் கொடுத்துவிட்டு, பலஇலட்சம் கோடி உருவா முதலீடு செய்து, தலைமேல் தொங்கும் கத்திபோல் ஆபத்தான - இந்த அளவுக்குக் குறை வான அணுமின்சாரம் உற்பத்தி செய்திட, தேவையா?
தற்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மின்கடத்தல், மின்பகிர்மானம் என்ற வகையில் - முதலாளிகளால் திருடப் படும் மின்சாரம் உட்பட - மின்இழப்பு 17% முதல் 27% வரை இருக்கிறது. இந்த மின் இழப்பில் பெரும் பகுதியைக் குறைக்க முடியும். வளர்ச்சி பெற்ற நாடுகளில் மின்இழப்பு 2% - 4% என்று உள்ளது. மின்இழப்பைக் குறைத்தாலே போதும், அணுமின் உற்பத்தியை எளிதில் தவிர்த்திடலாம். தமிழ்நாட்டில் குமிழ்மின் விளக்குகளை மாற்றினாலே 2000 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இந்திய அளவில் குண்டுப் பல்புகளை மாற்றினால் பல ஆயிரம் மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும்.
புகுஷிமா அணுஉலை விபத்தின் எதிரொலியாக, செருமன் நாட்டின் ஆட்சித் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், செருமனியில் உடனடியாக 8 அணுஉலைகள் மூடப்படும், மீதியுள்ள 9 அணுஉலைகள் 2022க்குள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். அணுமின் நுகர் வில் முதலிடத்தில் உள்ள பிரான்சும், மொத்த மின் உற்பத்தியில் அணுமின் உற்பத்தி 75% ஆக இருப்ப தை, 2025க்குள் 50% ஆகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகில் தற்போது 443 அணுஉலைகள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவை உள்ளன. சப்பானில் உள்ள 54 உலைகளில் 2011 மார்ச்சு 11இல் ஏற்பட்ட நிலநடுக்கம் - ஆழிப்பேரலை யின் கடும் தாக்குதலுக்குப்பின், 5இல் 1 பங்கு அணு உலை மட்டுமே செயல்படுகிறது. மற்றவை சுனாமி யால் சேதமடைந்துள்ளன. இவற்றைச் சரிசெய்து மீண்டும் இயக்குவதற்கு, அரசு எடுக்கும் நடவடிக்கை களை உள்ளூர்ப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்க் கின்றனர். அதனால் சப்பான் அரசு, உள்நாட்டுப் பயன் பாட்டுக்கு அணுஉலைகளைப் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது. சப்பானின் அணுசக்தித் தொழில்நுட்பங் களை, மின்பற்றாக் குறையால் தவிக்கும் வியட்நாம், துருக்கி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஆதரிப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது (தி இந்து, 20-10-2011).
சப்பானில் அணுசக்தித் துறையில் ஹிட்டாச்சி, மிட்ஷ்புஷி, டொஷிபா ஆகியவை முன்னணி நிறுவனங்களாகும். இம்மூன்று நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் அணுசக்தி மற்றும் கட்டுமானம் மூலம் 314 கோடி டாலர் இலாபம் ஈட்டின. சிரங்கு பிடித்தவன் கை வேண்டுமானால் சும்மா இருக்கக்கூடும்; ஆனால் மூலதனத்தால் இலாபவேட்டை யில் நாட்டங் கொண்டவர்கள், கொள்ளையில் ஈடு படாமல் இருக்கவே முடியாது. அதனால்தான் சப்பான், பிரான்சு, அமெரிக்கா, இரஷ்ய நாடுகளின் பன்னாட்டு அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் இலாப வேட்டையில் குதித்துள்ளன.
2010 திசம்பரில் பிரான்சின் அவேரா நிறுவனம் 10 இ.பி.ஆர். அணுஉலைகளை (EpR - European pressurised Reactors) மகாராட்டிரத்தில் ஜெய்தாபூரில் அமைத்திட இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. முதற்கட்டமாக 6 உலைகள் அமைப்பதற்கான பணி களைத் தொடங்கியதும் ஜெய்தாபூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். காவல்துறையினர் அவர்களைத் தாக்கினர். ஆயினும் மக்கள் தொடர்ந்து போராடியதால், பணிகள் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இ.பி.ஆர். வகை அணுஉலை பற்றி ஒரு செய்தி யை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் தற்போது இ.பி.ஆர். அணுஉலை ஒன்றுகூட இயக் கத்தில் இல்லை. பின்லாந்து நாட்டில், இ.பி.ஆர். வகை அணுஉலை ஒன்றை பிரான்சின் அவேரா நிறுவி வருகிறது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் பின்லாந்து அரசுக்கும் இடையே ஏற்பட்ட பல சட்டச் சிக்கல்களால் அதுவும் முடங்கிக் கிடக்கிறது. தற்போது எங்குமே இயக்கத்தில் இல்லாத இ.பி.ஆர். வகை உலைகள் பத்தை ஜெய்தாபூரில் அமைக்க நடுவண் அரசும் அணுசக்தித் துறையும் எப்படி ஒத்துக் கொண்டன?
மேற்குவங்கம் ஹரிப்பூரில் இரஷ்ய நிறுவனத்தின் அணுஉலைகளை அமைக்க, புத்ததேவ் ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. இப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அணுமின் உலைகள் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
ஜெய்தாபூரிலும், ஹரிப்பூரிலும் அணுஉலைகள் அமைப்பதற்கு முன்பே எதிர்ப்புத் தெரிவித்ததால் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் இழப்பு இல்லை.
ஆனால் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அணுஉலை 2011 திசம்பரில் செயல்படத் தயாராக உள்ளது. இரண்டாவது அணு உலை 2012 சூன் மாதம் இயக்கப்படவுள்ளது. இரண்டு அணுஉலைகளுக்காக ஏற்கெனவே ரூ.13,000 கோடிக்குமேல் செலவிடப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் 2000 மெகாவாட் அணுமின்சாரத்தில் தமிழ்நாடு 925, கர்நாடகம் 442, கேரளம் 266, புதுச்சேரி 67, ஒதுக்கப் படாதது 300 மெகாவாட் என்று பகிர்ந்து கொள்ள உள்ளது. கடுமையான மின்பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் கூடங்குளம் அணுஉலைகள் இயக்கப்படு வதைத் தடுத்து நிறுத்துவது நியாயமா? என்ற கேள்வி யை அணுசக்தி ஆதரவாளர்கள் மட்டுமின்றிப் பல தரப்பி னரும் கேட்கின்றனர்.
இதில் மதிப்பில் அடங்கா பல இலக்கம் மக்களின் உயிர்கள், வருங்காலங்களிலெல்லாம் ஏற்படவிருக்கும் கணக்கிடமுடியா கேடுகள், துன்பங்கள், அழிவுகள் ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு இதுவரை செல விடப்பட்ட தொகை அற்பமானது என்றே நாம் கொள்ள வேண்டும்.
1988 நவம்பர் 20 அன்று சோவியத் நாட்டின் அதிபர் கோர்பச்சேவும், இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தியும் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட வி.வி.இ.ஆர். அணுஉலைகள் (VVER-1000) இரண்டை நிறுவுவதற்கு ஒப்பந்தம் செய்தனர். 1990இல் சோவியத் நாடு சிதறுண்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 1998 சூன் 21 அன்று புதிய துணை ஒப்பந்தத்தின் மூலம் இத்திட்டம் புதுப்பிக்கப் பட்டது. அப்போதே கூடங்குளம் வட்டார மக்களும், பொதுநல அமைப்புகளும் இத்திட்டத்தை எதிர்த்தனர். ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் நடுவண் அரசின் அணுமின்சக்திக் கழகமும், மாநில அரசும் அணு உலை அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தின. 2001 மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இப்போது இரண்டாவது, மூன்றாவது அணுஉலைகளை அமைக்க நிலம் சீர் செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
2011 மார்ச்சில் சப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் - ஆழிப்பேரலையின் தாக்குதல்களால், புகுஷிமாவில் அணுஉலை வெடித்து அணுக்கதிர் வெளியேறியதால் ஏற்பட்ட கொடிய விளைவுகளைத் தொலைக்காட்சியில் கண்ட கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள், எதிர்காலத் தில் தங்களுக்கும் இதுபோல் நேரிடுமோ என்று அஞ்சுகின்றனர். அணுஉலைகளைக் குளிரூட்டிய பின் வெளியேறும் வெப்ப நீர் கடலில் கலப்பதால், மீன் வளமும், கடல் வளமும் சீரழியும் என்று மீனவர்கள் எண்ணுகின்றனர். மேலும் அணுவிபத்து ஏற்படும் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்கான ஒத்திகை செப்டம்பர் 20 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது வீட்டின் சன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு, ஈரத் துணியால் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மேலும் 30 கி.மீ. சுற்றளவில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது வெறும் ஒத்திகையாக இல்லாமல், தம்மை நிரந்தரமாகத் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் நெஞ்சில் குடிகொண்டது. கூடங் குளம் பகுதியைச் சுற்றிலும் 20-30 கிலோ மீட்டர் சுற்றளவில் 3.5 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
இரஷ்யாவின் அணுஉலைகளை முதலில் ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுனசாகரிலும், பின்னர், கர்நாட கத்தில் கைக்காவிலும், கேரளத்தில் பூதகான்கெட்டு என்ற இடத்திலும் அமைக்க மேற்கொண்ட முயற்சி அந்தந்த மாநில மக்களின் கடும் எதிர்ப்பால் கை விடப்பட்டன. இறுதியாகத் தமிழகத்தின் தலையில் சுமத்தப்பட்டது. தி.மு.க. அரசோ, அ.தி.மு.க அரசோ இதை எதிர்க்கவில்லை.
இந்த உண்மைகளையெல்லாம் அறிந்த கூடங்குளம் பகுதி மக்கள், இடிந்தகரையில் அணுமின்நிலையம் பின்புறம் உள்ள லூர்து மாதா கோயில் எதிரில் உள்ள திடலில் செப்டம்பர் 11 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். 117 பேர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத் தை மேற்கொண்டனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, போராட்டத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தனர். அணுசக்திக்கு எதிரான மக்கள்இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக் கணித்து போராட்டத்தில் பங்குகொண்டனர். கடலுக் கும் செல்லாமல் மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். கடைகளை அடைத்து வணிகர்கள் தம் ஆதரவைத் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடங்குளத்துக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
செப்டம்பர் 16 அன்று, முதலமைச்சர் செயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்ப தைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் போராட்டத்தின் பேரெழுச்சியைக் கண்டும், செப்டம்பர் 7 அன்று பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். செப்டம்பர் 19 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதினார். அதில், “நடுவண் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. மக்கள் அச்சத் தால் போராடும் போது, பொறுப்புள்ள நடுவண் அமைச்சரோ, உரிய உயர் அதிகாரிகளோ போராட் டக்காரர்களைச் சந்தித்து அவர்களின் அச்சத்தைப் போக்க வரவில்லையே ஏன்?” என்ற கேள்வியை எழுப்பினார். அடுத்தநாளே நடுவண் துணை அமைச்சர் வி. நாராயணசாமி கூடங்குளத்தில் இடிந்தகரையில் போராட்டத்திடலுக்கு வந்து மக்களிடம் பேசினார். அவருடைய சமாதானத்தை மக்கள் ஏற்கவில்லை.
செப்டம்பர் 22, அன்று தமிழக அமைச்சரவை, “கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வரையில், கூடங்குளத்தின் அணு மின்நிலையத்தில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தீர் மானம் இயற்றிப் பிரதமருக்கு அனுப்பியது, கூடங் குளத்தில் தற்காலிகமாகப் போராட்டம் நிறுத்தி வைக் கப்பட்டது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலை மையில் அனைத்துக் கட்சிக் குழு 7.10.2011 அன்று தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரும் இக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். பிரதமர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கிட வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார். 20.10.2011 அன்று 15 பேர் கொண்ட வல்லநர் குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவுடன் இவர்கள் கலந்துபேசி, கூடங்குளம் அணுஉலையால் எப்போதும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அப்பகுதி மக்களுக்குப் புரிய வைக்கப் போகிறார் களாம்? இவை எல்லாம் காலம் கடத்தும் அரசியல் சூழ்ச்சிகளேயாகும்.
புகுஷிமா அணு விபத்துக்குப்பின், பிரதமர் மன் மோகன்சிங், இந்தியாவில் உள்ள எல்லா அணு உலைகளிலும், எத்தகைய விபத்து நேர்ந்தாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துமாறு ஆணையிட்டாராம்; அதன்படியே செய்யப்பட்டுவிட்டது என்று அணுசக்தித் துறையின் உயர் அதிகாரிகள் அண்டப்புளுகு - ஆகாயப்புளுகு பேசுகின்றனர்.
உலகில் மிகச்சிறந்த தொழில்நுட்பம் கொண்ட சப்பான் நாட்டிலேயே அணுவிபத்து நடந்திருக்கிறது. 1971ஆம் ஆண்டிலேயே புகுஷிமா கொதிநீர் அணு உலையில் சில குறிப்பிட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்பது வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இதைச் சரிசெய்வதற்கு டோக்கியோ மின் சக்திக் கழகம் முயலவில்லை. இதேபோன்று இந்தியா வில் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையின் பாதுகாப்புக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டும் அவற்றைச் சரிசெய்யாததால் 1984 திசம்பரில் நச்சுவாயு கசிந்து வெளியேறியது. சொல்லொணாத இழப்புகளை உண் டாக்கியது.
கூடங்குளத்தில் இரஷ்ய நிறுவனம் அமைத் துள்ள அணுஉலை (VVER-1000), பிரான்சின் அரேவா நிறுவனத்தின் இ.பி.ஆர். வகையைவிட, புகுஷிமாவில் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (G.E.) நிறுவனம் அமைத்த அணுஉலையைவிட மிகவும் பாதுகாப்பானது என்று அணுசக்தித் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகில் நம்பகத்தன் மைக்குப் பெயர் பெற்ற நார்வே ஆய்வுக் குழு 2011 சூன் மாதம் இரஷ்யாவின் அதிபர் மெத்வதேவிடம் ஓர் அறிக்கை அளித்தது. அதில் இரஷ்யாவில் இயங்கும் அணுஉலைகளில், இயற்கைப் பேரிடராலோ, மனிதர் களின் தவறினாலோ ஏற்படக்கூடிய விபத்துகளை எதிர் கொள்வதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று கூறப்பட்டிருந்தது (பிரண்ட்லைன் அக்டோபர் 21, 2011). ஆனால் இந்திய ஆளும்வர்க்கம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை களுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் அளித்து, மக்களை ஏய்க்கப் பார்க்கிறது.
அணுஉலைக் கழிவுகளைக் கையாள, உலகில் எந்தவொரு நாட்டிலும் சரியான தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்படவில்லை. அனைத்துக் கழிவுகளையும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் அடைத்துக் கடலுக்கு அடியிலோ, நிலத்துக்கு அடியிலோ புதைக்க வேண் டும். சில கழிவுகளின் கதிர்வீச்சுக்கு வாழ்நாள் 24,000 ஆண்டுகள் முதல் பல இலட்சம் ஆண்டுகள் வரை நீடிக்கும். ஓர் அணுஉலையின் வாழ்நாள் 30-40 ஆண்டுகளாகும். அதன்பின், அவற்றைப் பிரித்து ‘அடக்கம்’ செய்வதற்கும் பலகோடி செலவிட வேண்டும்.
இந்தியாவில் தற்போது காற்றாலை நிறுவுதிறன் 14,723 மெகாவாட். இதில் தமிழ்நாடு, 6,160 மெகா வாட் உற்பத்தி நிறுவுதிறன் பெற்றுள்ளது. தேவை யான அளவில் காற்று வீசும் காலங்களில் 4000 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றா லைகளை நவீனப்படுத்துவதுடன், அதிக எண்ணிக்கையில் காற்றாலைகளை நிறுவி, காற்று அடிக்கும் காலத்தில் அதிக அளவில் மின்உற்பத்தி செய்து கொள்ளலாம். நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற மலர்சாகுபடி அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மின்சாரத்தைக் கொண்டே செய்யப்படு கிறது.
22.9.2011 அன்று மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பாரூக் அப்துல்லா,“இந்தியாவில் 2020 க்குள் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 15% மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி நிறுவுதிறன் 20,000 மெகாவாட்டாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
காற்றாலைகள், சூரிய ஆற்றல் மின் உற்பத்தி, சாண எரிவாயு அமைத்தல் போன்றவைகளுக்கு அரசு பெருமளவில் மானியமும் கடன் உதவியும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். பெரிய உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் மற்ற பெரிய கட்டடங்கள் ஆகிய வை சூரியசக்தி மூலமே மின்உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயம் என்று ஆக்க வேண்டும்.
புதியதாகக் கட்டப்படும் வீடுகளில் சூரிய சக்தி மின்உற்பத்திச் சாதனங்கள் அமைத்திட அரசு உதவி செய்ய வேண்டும். உலகில் பல நாடுகளும் இத்திசை யை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
கூடங்குளத்தில் ரூ.13,000 கோடி செலவிட்டு அமைத்துள்ள அணுஉலைகளை, அணுசக்தி விபத்தின் பேராபத்துகளையும், மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு கைவிட வேண்டும். தமிழகத்தி லோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ புதியதாக அணுஉலை அமைப்பதை மக்கள் ஒன்றுதிரண்டு தடுக்க வேண்டும். எல்லா வாக்குவேட்டை அரசியல் கட்சிகளும் பெருமுதலாளிகளின் எடுபிடிகள் என்பதை நாம் மறத்தல் கூடாது.
அமெரிக்காவின் மற்றும் பிற நாடுகளின் பன்னாட்டு அணுசக்தி நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக, நம் நாட்டு மக்களை உயிரியல், வேதியியல் ஆய்வுக் கூடத்தின் எலிகளாக்கும் ஆளும்வர்க்கத்தின் முகத்திரையைக் கிழிப்போம். அணுஒப்பந்தம் என்ற பெயரால் - உலகில் சனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவலா ளாக இந்திய அரசு மாற்றப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்.

அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1

அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 19
குறைந்தஅதி சிறந்த 
கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக 13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.
அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.
 வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!
இந்திய மின் நிலவரம்: மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம், வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.
energy_efficiency_300இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது. மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.
அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத் தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட் தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.
இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின் இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில் (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate Transmission & Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது. நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!
மின் பற்றாக்குறை: தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத் தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!
விஷ‌யம் இந்தியாவில் இப்படி இருக்க, உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக் காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.
ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும் துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே! அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக் காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கிறார்களா?
இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம்.
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்: அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis), பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.
 அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.
ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம் செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுமுறை.
அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது.
இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.
இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1 முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும். இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல், எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டில் அமெரிக்க அனுபவம்: 1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்!
அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல் சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர் தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.
2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:
1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!
2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!
மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.
இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.
உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):
CFL_330நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load) முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும் மின்மோட்டர்களால்தான்.
எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது, ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில் இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா? என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள்.
 மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
 திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில், மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy), காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!
 அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்!
உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?
இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவு: இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.
 இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Center for Energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷ‌த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India) ஆகியன.
 இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”
 “இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் (Data) இல்லை என்பது தான்”.
 அவர்கள் சொன்னவை இன்றளவும் இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!
 அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல் போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?
நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர்.
 இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?
 பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source) பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும் Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப் பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?
- கோபால் ( sugiprakash@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Wednesday, 9 November 2011

அணுவின் கழிவும் கொல்லும்!

அணுவின் கழிவும் கொல்லும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘ உயிருக்காக’ ஒரு பெரும் மக்கள் போராட்டம், தென்தமிழ்நாட்டின் வங்கக்கடல் கரையோரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுஉலைக்கு எதிராக, அமைதி வழியில் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, இடிந்தகரையிலும், கூடன்குளத்திலும் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். கடந்த செப்டம்டர் 11இல் தொடங்கிய அம்மக்களின் போராட்டம், மத்திய அரசிடம் பேசுவதற்காக, ஒருசில நாள்கள்  கைவிடப்பட்டு,  மீண்டும் இரண்டாம் கட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. கல்பாக்கம் அணுமின் நிலையம் 1984 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடன்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. அது செயல்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஆபத்தான அணு உலையை மூட வேண்டும் என்பது மக்களின் ஒற்றைக் கோரிக்கை. நாட்டின் வளர்ச்சிக் காகத்தானே இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம், பிறகேன் அதை எதிர்க்க வேண்டும், ஆபத்து எதில்தான் இல்லை. தொழிற்சாலைக் கழிவுகளால் ஆபத்தில்லையா? என்கிற கேள்வி இயல்பாகக் கேட்கப்படுகிறது. அதிலும் ஆபத்து  இருக்கிறது. ஆனால் கழிவுகளைச் சுத்திகரித்தல் என்பதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். ஆனால் இலட்சக் கணக்கான ஆண்டுகளானாலும் அழியாத அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்வது? பீப்பாய்களில் அடைத்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துவிடலாமா?
அணு உலைகளில் பல வகைகள், பல்வேறு தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் என விஞ்ஞான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நாட்டின் மின் தேவையை சரிசெய்வதற்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்கிறது இந்திய அரசு. ஆனா0ல், ஏறத்தாழ 25 ஆண்டுகள், 100 கோடிகளை செலவிட்டாலும், நாட்டின் மொத்த மின்தேவையில் 9 விழுக்காட்டைக் கூட நிறைவு செய்ய முடியாது இந்த அணுமின் நிலையங்களால் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அரசின் உண்மையான  தேவை மின்சார உற்பத்தி அன்று, அதன் உபரிப் பொருளாகக் கிடைக்கும் பூளுட்டோனியமே என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம். புளுட்டோனியம் என்ன அவ்வளவு பெரிய பூதமா என்றால், ஆம் மனிதர்களை உயிரோடு விழுங்கும் பூதத்திற்கு உயிர் கொடுப்பது அதுதான். அணுகுண்டு தயாரிப்பில் புளுட்டோனியம் முக்கிய இடத்தைப் பெறுகிற காரணத்தால்தான், அணுஉலைகளுக்காக மாரடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
உலக அரங்கில் தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசிற்கும், ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களின் உயிரும், வாழ்வும் ஒரு பொருட்டாகப் படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் கூடன்குளம் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு காட்டும் பிடிவாதப்போக்கு. தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “ பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டத்தில் அரசும், மக்களும் ஒரே நிலையில்தான் உள்ளனர் ” என்று கூசாமல் சொல்கிறார் . வாழ்வா தாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த மக்களிடம் மிச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது? அணுக் கதிச் வீச்சின் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்து, அவற்றின் ஆற்றல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத் திருக்கின்றன. சீனா இனிமேல் புது அணுஉலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஆனால், சீனப் பெருமை பேசும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் தா. பாண்டியன், ‘ மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் ’ என்று கவலைப்படுகிறார்.
ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினரின் காட்டுமிராண்டித் தனத்தி னாலும், அதைக் கண்டுகொள்ளாத இந்திய அரசின் கையாலாகாத்தனத் தினாலும், கரணம் தப்பினால் மரணம் என்றாகிவிட்டது தமிழக மீனவர்களின் வாழ்வு. இதில், குப்புறத்தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக அணுமின் நிலையத்தை நிறுவி அவர்களின் தலைமுறையையே தலைதூக்க விடாமல் செய்யத் துடிக்கிறது மத்திய அரசு. அணுமின் நிலையக் கழிவுநீர் கடலில்தான் விடப்படும். ஆறுகள்தான் கடலில் சென்று கலக்க வேண்டும். அணுக்கழிவுகள் கலக்கலாமோ?
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் அணுமின் நிலையம் தேவையில்லை என்கின்றன. ஒன்றியப் பொறுப்பாளரைக் கூட அனுப்பாத ஜெயலலிதா, ஓட்டு கேட்பதற்காகத் தூத்துக்குடிக்குப் போகநேர்ந்ததால், அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக்         கூட்டத்தில், ‘ நான் மக்கள் பக்கம்’ என்று  கூறியிருக்கிறார். அதை முதலமைச்சராகச் சொன்னாரா அல்லது அ.தி.மு.க. பொதுச்செயலாளராகச் சொன்னாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காங்கிரசைச் சேர்ந்த தங்கபாலு, மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அவர்களின் சந்தேகத்தை தீர்த்துவிட்டுப் பிறகு பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கின்றார்.
அந்த மக்கள் என்ன சந்தேகத்தை அரசிடம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அணுமின் நிலையப் பணி இடங்களில் எங்களுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவீர்கள் என்று கேட்டார்களா?  விபத்துகள் ஏற்பட்டால், எவ்வளவு இழப்பீடு தருவீர்கள் என்று கேட்டார்களா? வாரிசு அடிப்படையில் வேலை கொடுப்பீர்களா என்று கேட்டார்களா? இது எதையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஒரே கோரிக்கை, அணுமின் நிலையம் தேவையில்லை, அதை மூட வேண்டும் என்பதுதான். அணு உலைகள் பாதுகாப்பானவை என்னும் பல்லவியை, ஜப்பானின் புகு´மோவிற்குப் பிறகும் பாடிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
உருட்டி உருண்டையாக்கி அணுகுண்டாகப் போட்டால்தான் அழிவு என்பதில்லை. அணுவின் கழிவு கூட மனித குலத்தை அழித்துவிடும். 1945இல் ஹிரோசிமோவிலும், நாகாசாகியிலும் விதைக்கப்பட்ட விபரீதம் இன்னும் தொடர்வதை அறியாதவர்களா நாம்? போபால் விசவாவு கசிவின் வீரியத்தை உணராதவர்களா நாம்? மேரி க்யூரி, இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க விஞ்ஞானி. யுரேனியம், பொலேனியம் என்னும் அவருடைய கண்டுபிடிப்புகள் கதிர் வீச்சு மூலகங்கள்.   அவருடைய ஆய்வு முழுவதும் கதிரியக்கம் பரவியிருக்கும் ஆய்வுக் கூடத்தில்தான். கதிர் வீச்சின் தாக்கத்தால், கண் பார்வை பாதிக்கப்பட்டு,  ஏற்பட்ட பெர்னிசியஸ் அனீமியா என்னும் நோயினால் அவர் இறந்தார் என்கிறது வரலாறு. அவர் அன்று பயன்படுத்திய குறிப்பேடுகளில் இன்றளவும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை உண்மைகளில் ஒன்று கூடவா ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை?
மின்சாரம்தான் நோக்கம் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அவற்றைப் பரிசீலிப்பதுதானே? வெப்ப நிலப்பகுதியான இந்தியாவில், சூரியசக்தியை முறையாகப் பயன்படுத்தி மின்சாரம் பெறலாம்தானே! கையில் இருக்கிற வெண்ணெயை மறந்துவிட்டு நெய்க்கு அலையறான் பாரு என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இந்திய அரசின் செயலும். வெறும் பொருளாதார வல்லுனராக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் நலனில் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

Tuesday, 8 November 2011

அணு உலை வெடிக்கவில்லை ....தீபாவளி பட்டாசுதான் வெடித்தது -காமெடியோ காமெடி

அணு உலை வெடிக்கவில்லை ....தீபாவளி பட்டாசுதான் வெடித்தது -காமெடியோ காமெடி


கடந்த 21  ம் தேதி ஒரு தமிழ் தின நாளிதழில் இந்திய அணு மின் கழகம் ஓர் அறிக்கை கொடுத்துள்ளது .அதில் உலகின் மிக மோசமான அணு விபத்துக்கள் பற்றி விளக்கம்  கொடுத்துள்ளது .
 
இந்திய  அணு மின்  கழகம் : 1979  ல் அமெரிக்காவிலுள்ள  திரீ மைல் தீவில்  ஏற்பட்ட அணு விபத்தில்  கதிர்  வீச்சு ஏற்படவில்லை .
 
இப்ப நாம கேக்குறது   : திரீ மைல் தீவில்  ஏற்பட்ட அணு விபத்தில்  கதிர்  வீச்சு கலந்த  40000   கேலோன்  நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது  .அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 1  லட்சத்து 40  ஆயிரம்  பேர் வெளியேற்றப் பட்டுள்ளார்கள் .இவ்விபத்தை தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க அணுசக்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .( visit -http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) .உங்கள் கருத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் கூறி அவர்கள் அச்சத்தை அகற்றுங்கள் .
 
இந்திய  அணு மின்  கழகம் : செர்நோபில்   அணு விபத்தால்   56  தீயணைப்பு வீரர்கள் மட்டுமே இறந்தனர் .விபத்தால் மறைமுகமாக கேன்சர் ஏற்பட்டுள்ளது.இது அனல் மின் நிலையங்களால் ஏற்படும்  பாதிப்பை   விட குறைவுதான் .
 
இப்ப நாம கேக்குறது   : செர்நோபில் விபத்தால் 4000  பேர் இறந்ததாகவும் லட்சக் கணக்கானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது (visit:http://www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/index.html).என்ன  சார்    பூசணிக்காய்   தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க . 
 
இந்திய  அணு மின்  கழகம் : சுனாமியின்  போது ஜப்பான் அணுமின் நிலையத்தில்  ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல்  கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை . 
 
இப்ப நாம கேக்குறது   : அப்படீன்னா  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .
 
கடைசியாக நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் இப்படி புளுகு மூட்டைகளை    அவிழ்த்து விடும் இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த 15  பேர் கொண்ட குழுவை அமைத்தது .

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6  பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது .

இந்நிலையில் தற்போது அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக 21 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது .இக்குழுவில் பிரபல விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர் .போராட்டக் குழு சார்பில் அமைக்கப் பட்டுள்ள நிபுணர் குழு விபரம்.


1)திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர்  மற்றும் இந்திய கப்பல் படை முன்னாள் கேப்டன் )

2)திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )

3)திரு சிவாஜி ராவ் (விசாகப்பட்டினம் பல்கலைக் கழக சுற்றுசூழல் மைய  இயக்குனர் )

4)திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )

5)திரு அருணாச்சலம் (நெல்லை பல்கலை கழக பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மைய  தலைவர் )

6)திருமதி சவும்யா  தத்தா (இந்திராகாந்தி சுற்றுசூழல் ஆய்வு மைய முன்னாள் தலைவர்)

7)திரு மெகர் எஞ்சினியர் (அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர் )

8)திரு சுரேந்திரா கடேகர் (அணு சம்மந்தமான எழுத்தாளர்)

9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )

10)திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய  முதுநிலை விஞ்ஞானி)

11)டாக்டர் புகழேந்தி (கல்பாக்கம் சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொண்டவர்)

12)டாக்டர் ரமேஷ்(கூடங்குளம் புவி அமைப்பு ஆராச்சியாளர்)

13)திரு அனுமந்த  ராவ் (தமிழ்நாடு  மின்சார வாரிய  ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர்)

14)திரு லஜபதி  ராய் (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )

15)திரு சுக்லாசென்  (கொல்கத்தா பிரபல பொறியாளர்)

16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )

17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)


18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )

மற்றும்  மூன்று பேர்

இவர்கள் அனைவரும் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தரவுள்ளனர் .

அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்

அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்


இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூடக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார் .

அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் .

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த  அவர் மின் தேவைக்கு அணுசக்தி சிறந்த வழி கிடையாது என 1975  ல் அங்கிருந்து விலகினார் .அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை எனவும் அவை அனைத்தும் மூடப்படவேண்டியவை என்றும் கூறும் அவர் இந்திய அணுமின் நிலையங்கள் குறித்த பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார் .

1974  முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம்  நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் நினைவுகூரும் அவர் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார் .

எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு  உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள்  ஏமாற்றப் படுகிறார்கள்  என்றும்   அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

இந்திய அணு உலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் மீறப்படுவதாகவும் அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தால் 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அணு உலையைக் குளிர்வித்து கடலில் கலக்கும் நீரிலுள்ள மாசுகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார் .

இந்திய அணுமின் கழகம் NPCIL  2030  க்குள் நாட்டில் மொத்த மின்தேவையில் 8  சதவீதத்தை பூர்த்தி போவதாகக் கூறுகிறது  .இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா 2000  ஆவது ஆண்டுக்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் 140000  மெகாவாட் மின்சாரம் தயாராகும் என்று கூறினார் .ஆனால் இன்று வரை வெறும் 4500  மெகாவாட்டைதான் கடக்க முடிந்துள்ளது என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

அணு உலையைக் கட்ட பத்து வருடங்கள் ஆகிறது என்றும் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த அணு உலையை கட்ட ஆகும் அதே அளவு செலவு ஆகும் .மேலும் இதற்கான தொழில் நுட்பமும்  இந்தியாவிடம் கிடையாது என்பதால் வேறு வழியின்றி அணு உலைகளின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர் .

சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும்  இதே கருத்தை கூறுகிறார் .

நன்றி : டி என் எ  இந்தியா