அணு உலை வெடிக்கவில்லை ....தீபாவளி பட்டாசுதான் வெடித்தது -காமெடியோ காமெடி


கடந்த 21 ம் தேதி ஒரு தமிழ் தின நாளிதழில் இந்திய அணு மின் கழகம் ஓர் அறிக்கை கொடுத்துள்ளது .அதில் உலகின் மிக மோசமான அணு விபத்துக்கள் பற்றி விளக்கம் கொடுத்துள்ளது .
இந்திய அணு மின் கழகம் : 1979 ல் அமெரிக்காவிலுள்ள திரீ மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தில் கதிர் வீச்சு ஏற்படவில்லை .
இப்ப நாம கேக்குறது : திரீ மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தில் கதிர் வீச்சு கலந்த 40000 கேலோன் நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது .அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளார்கள் .இவ்விபத்தை தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க அணுசக்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .( visit -http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) .உங்கள் கருத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் கூறி அவர்கள் அச்சத்தை அகற்றுங்கள் .
இந்திய அணு மின் கழகம் : செர்நோபில் அணு விபத்தால் 56 தீயணைப்பு வீரர்கள் மட்டுமே இறந்தனர் .விபத்தால் மறைமுகமாக கேன்சர் ஏற்பட்டுள்ளது.இது அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்பை விட குறைவுதான் .
இப்ப நாம கேக்குறது : செர்நோபில் விபத்தால் 4000 பேர் இறந்ததாகவும் லட்சக் கணக்கானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது (visit:http://www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/index.html).என்ன சார் பூசணிக்காய் தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க .
இந்திய அணு மின் கழகம் : சுனாமியின் போது ஜப்பான் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல் கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை .
இப்ப நாம கேக்குறது : அப்படீன்னா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .
கடைசியாக நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment