Thursday, 3 November 2011

அழிகிறது பருந்து இனம்!

வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (21:56 IST)

அழிகிறது பருந்து இனம்

 ஊட்டியில் உள்ள எச்.ஏ. டி.பி., பயிற்சி அரங்கில் பருந்துகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.

அப்போது,   ‘’பருந்துகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளின் இறைச்சிகளை மட்டும் உட்கொள்ளும் தன்மையுடையது. டைகுளோ பின் எனப்படும் மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
சில நேரங்களில் அவ்வாறு மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளில் வனப்பகுதிகளில் விழுந்து இறந்துவிடுகின்றன.

இறந்த கால்நடைகளின் உடல் களை பருந்துகள் உட்கொள்கின்றன.

இதை உட்கொள்ளும் பருந்துகள் கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டுள்ள மருந்தின் வீரியத்தால் மரணமடைந்து விடுகின்றன.
மேலும் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பருந்துகள் வேகமாக அழிந்து வருகின்றன. அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலில் பருந்தும் இடம்பெற்றுள்ளன.

அதனை பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கடமை. ஒவ்வொருவரும் பருந்து களை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கவேண்டும்’’என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
 
nandri- nakkeran website




No comments:

Post a Comment