Thursday, 3 November 2011

அடக்கம் செய்யவா அறிவியல்?

அடக்கம் செய்யவா அறிவியல்?



செருப்புகளுக்காகக்
காலை வெட்டிக்கொள்ளலாமா?

பாலுக்குப் பூனையைக்
காவல் வைக்கலாமா?

குருவிக் கூட்டுக்குள்
அணுகுண்டுச் சோதனை நடத்தலாமா?

நெருப்பில் குளிர்காயலாம்
நெருப்புக்குள் குளிர்காயமுடியுமா?

நம் தேவைக்காகத்தானே அறிவியல்
அறிவியலின் சோதனைக்காகவா நாம்?

ஆண் பெண்
சிறியவர் பெரியவர்
ஏழை பணக்காரன்
படித்தவர் படிக்காதவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்

என எந்த பாகுபாடும் இன்றி
எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி..

அணுஉலை
மூச்சுக்காற்றா?
விச ஊற்றா?


எந்த திசை திரும்பினாலும் கேட்கும் ஒரே ஒலி..

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டும்!!

“இத்தனை பேரும் இதுவரை எங்கு சென்றார்கள்“ என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...

“வருமுன்னே அறிவதற்கும், காப்பதற்கும்
மக்கள் என்ன தீர்க்கதரிசிகளா? கடவுளர்களா?“


அறிவாளிகளே இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..

அறிவியல் கொண்டு
ஆக்கம் செய்யலாம்!
அணு உலை கொண்டு மக்களை
அடக்கம் செய்யலாமா?


nadri- gunathamil.blogspot.com

No comments:

Post a Comment